முந்து
நாளதில் வந்தவெண் காசுகள் |
மூப்ப ரிடங்கொண்டு சென்று - திரு |
மூர்த்தியைக் காட்டினே னென்று - அவர் |
முன்பு தன்பிழை கூறி முப்பது |
வெண்பணங்களை
மீள வைத்திடு |
முந்தியே
யவர் எங்களுக் கேனென |
முன்னவன் கோயி லெறிந்தான் - பின்பு |
முடுகிப்போய் நான்று முடிந்தான். |
|
அந்த மாபண
முங்கறை மாவிலை |
ஆகாது காணிக்கை
யென்றே - உடன் |
ஆசாரி யர்நிலங்
கொண்டார் - அங்கே |
அன்னியப் பிணமடக்க
வேளிடம் |
இன்னு மப்புலம்
இரத்த மாநிலம் |
அன்றெரேமியா
முந்துரை வாசகம் |
ஆனது வேநிறை
வேறி - உரை |
வீணுறு மோதாசன்
கூறி |
|
புந்தி யாகவே
பொந்தியு ஏசுவைப் |
பூபதியோ வென்று
கேட்டான் - அவர் |
புகன்றபடி யென்னக்
கேட்டான் - யூதர் |
பொய்ப்பெருங் குறை கூறவே திரு |
மெய்ப்பரன்
பதில் மாறவேயிலை |
புண்படாது வியந்த
தேசாதிபன் |
போற்றார்
பொறாமையைக் கண்டான் - இரு |
புரையரில்
யார்க்குவீ டென்றான் |
|
மன்று பீடம மர்ந்துள
வேளையில் |
மகிபன்
பிலாத்துவின் தேவி - ஒரு |
மனிதனையே
விரைந்தேவி - அந்த |
மாதவத்தனை
நீவருத்தலி |
ராவிலத்தனை
பாடுபட்டனென் |
மண்டலாதிப கண்டுகொளே
யென |
மகிணனிடஞ்
சொல்லச் சொன்னாள் - ஒரு |
மழலைமொழிக்
கிள்ளை யன்னாள் |