பக்கம் எண் :

136செந்தமிழ்க் காஞ்சி

New Page 1
   முந்து நாளதில் வந்தவெண் காசுகள்
   மூப்ப ரிடங்கொண்டு சென்று - திரு
   மூர்த்தியைக் காட்டினே னென்று - அவர்
   முன்பு தன்பிழை கூறி முப்பது
      வெண்பணங்களை மீள வைத்திடு
   முந்தியே யவர் எங்களுக் கேனென
   முன்னவன் கோயி லெறிந்தான் - பின்பு
   முடுகிப்போய் நான்று முடிந்தான்.
 
   அந்த மாபண முங்கறை மாவிலை
      ஆகாது காணிக்கை யென்றே - உடன்
      ஆசாரி யர்நிலங் கொண்டார் - அங்கே
   அன்னியப் பிணமடக்க வேளிடம்
      இன்னு மப்புலம் இரத்த மாநிலம்
   அன்றெரேமியா முந்துரை வாசகம்
      ஆனது வேநிறை வேறி - உரை
      வீணுறு மோதாசன் கூறி
 
   புந்தி யாகவே பொந்தியு ஏசுவைப்
      பூபதியோ வென்று கேட்டான் - அவர்
      புகன்றபடி யென்னக் கேட்டான் - யூதர்
   பொய்ப்பெருங் குறை கூறவே திரு
      மெய்ப்பரன் பதில் மாறவேயிலை
   புண்படாது வியந்த தேசாதிபன்
      போற்றார் பொறாமையைக் கண்டான் - இரு
      புரையரில் யார்க்குவீ டென்றான்
 
   மன்று பீடம மர்ந்துள வேளையில்
      மகிபன் பிலாத்துவின் தேவி - ஒரு
      மனிதனையே விரைந்தேவி - அந்த
        மாதவத்தனை நீவருத்தலி
        ராவிலத்தனை பாடுபட்டனென்
   மண்டலாதிப கண்டுகொளே யென
        மகிணனிடஞ் சொல்லச் சொன்னாள் - ஒரு
        மழலைமொழிக் கிள்ளை யன்னாள்