பண்டி
கையுற வந்தவ ரேவலால் |
பரபா சைவிட வென்று கேட்டார் - ஏசு |
பரமனை யறையவே வேட்டார் - அந்தப் |
பாம ரக்குழு படியப் பொந்தியு |
தான
டக்கவு முடிதற் கின்றெனப் |
பங்கு நானிலை இந்த மகான்பழி |
பாருமென்றே மண்ணிக் காட்டும் - அந்தப் |
பழியெங்கள் வழியென்னுங் கூட்டம். |
|
அந்த
நேரமே பொந்தியு வாணையில் |
அரிய கள்ளன் சிறை வீடு - தேவ |
மறியின்
சிலுவையிற் பாடு - உடன் |
அரமனைப் படைவீரர் யாவரும் |
இருதி
றப்பட மேவி யேசுவின் |
அங்கவாடை
விலங்கவே சேயுடை |
அணிந்து முண்முடி தலை மேலே - கரம் |
அளித்தொரு மூங்கிற்செங் கோலே |
|
முன்பு
யூதமன் வந்தனம் வாழ்கென |
முழங்காற்
படியிட்டு வாழ்த்தி - அவர் |
முகந்தனில்
உமிழ்நீரை வீழ்த்திக் - கர |
மூங்கிலாலவர் சிரமறைந்துடன் |
வாங்கு சேயுடையது பகிர்ந்தபின் |
முந்தையாடை
யணிந்துட னேகினர் |
முதுகாடு தான்கொல் கதாவே - பின்பு |
மொழிய வரவில்லை நாவே. |