பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 137

பண
   பண்டி கையுற வந்தவ ரேவலால்
      பரபா சைவிட வென்று கேட்டார் - ஏசு
      பரமனை யறையவே வேட்டார் - அந்தப்
      பாம ரக்குழு படியப் பொந்தியு
   தான டக்கவு முடிதற் கின்றெனப்
      பங்கு நானிலை இந்த மகான்பழி
      பாருமென்றே மண்ணிக் காட்டும் - அந்தப்
      பழியெங்கள் வழியென்னுங் கூட்டம்.
 
   அந்த நேரமே பொந்தியு வாணையில்
      அரிய கள்ளன் சிறை வீடு - தேவ
   மறியின் சிலுவையிற் பாடு - உடன்
      அரமனைப் படைவீரர் யாவரும்
   இருதி றப்பட மேவி யேசுவின்
   அங்கவாடை விலங்கவே சேயுடை
      அணிந்து முண்முடி தலை மேலே - கரம்
      அளித்தொரு மூங்கிற்செங் கோலே
 
   முன்பு யூதமன் வந்தனம் வாழ்கென
      முழங்காற் படியிட்டு வாழ்த்தி - அவர்
      முகந்தனில் உமிழ்நீரை வீழ்த்திக் - கர
      மூங்கிலாலவர் சிரமறைந்துடன்
      வாங்கு சேயுடையது பகிர்ந்தபின்
   முந்தையாடை யணிந்துட னேகினர்
      முதுகாடு தான்கொல் கதாவே - பின்பு
      மொழிய வரவில்லை நாவே.

30
ஏசுவானவர் சிலுவையைச் சுமந்தேகினது

    இராகம் - செஞ்சுட்டி தாளம் - சாப்பு

கண்ணிகள்

   சிலுவை சுமந்திதோ செல்கிறார் சாமியே
   கொலுவை நினைந்தொரு கொல்கதாப் பூமியே
 
   கட்டியங் காரனுங் காரணம் கூறவும்
   திட்டியே சேவகர் தீவிரஞ் சேரவும்