பாரிலுள் ளோர்செய்த பாவங்கள் யாவுமே |
பாரமாக
எய்தப் பாரித்த வேதமே |
|
ஆகார
முண்ணாமல் ஆவி யொடுங்கவும் |
தேகமோ
புண்களால் தேங்கி நடுங்கவும் |
|
நித்திரை
யில்லாமல் நியாயம் விசாரித்துக் |
கட்டியே
கண்களும் காந்தி யெரிவுற்று |
|
வையமெய்
பேயுடன் வாகைமல் லாடியே |
கையயர்ந்து
பின்னே கால்கள்தள் ளாடியே |
|
கேடுகெட்
டபவக் கேளைத் தழுவுறப் |
பாடுபட்
டேவரும் பாரச் சிலுவையைத் |
|
தாங்க
முடியாமல் தஞ்சமே வீழவும் |
ஆங்கொரு
சீமோனை அன்றினர் ஆளவும் |
|
கல்வாரி
மாமலை கண்டு சமீபமே |
கொல்வாரே கோதில்லாக் குன்றைஎன் பாவமே. |