பக்கம் எண் :

138செந்தமிழ்க் காஞ்சி

   பாரிலுள் ளோர்செய்த பாவங்கள் யாவுமே
   பாரமாக எய்தப் பாரித்த வேதமே
 
   ஆகார முண்ணாமல் ஆவி யொடுங்கவும்
   தேகமோ புண்களால் தேங்கி நடுங்கவும்
 
   நித்திரை யில்லாமல் நியாயம் விசாரித்துக்
   கட்டியே கண்களும் காந்தி யெரிவுற்று
 
   வையமெய் பேயுடன் வாகைமல் லாடியே
   கையயர்ந்து பின்னே கால்கள்தள் ளாடியே
 
   கேடுகெட் டபவக் கேளைத் தழுவுறப்
   பாடுபட் டேவரும் பாரச் சிலுவையைத்
 
   தாங்க முடியாமல் தஞ்சமே வீழவும்
   ஆங்கொரு சீமோனை அன்றினர் ஆளவும்
 
   கல்வாரி மாமலை கண்டு சமீபமே
   கொல்வாரே கோதில்லாக் குன்றைஎன் பாவமே.

31
ஏசுவைச் சிலுவையி லறைந்தது

'திருவுற்றிலகு கங்கை' என்ற மெட்டு

   அமரச் சேவகரேசு குமரக் கடவுளானை
   அறையச் சிலுவை யோடு சென்றனர் - அந்தப்
   பொறையைச் சீமனதாகு மென்றனர் - களி
      ஆடு கூளிகள் பல்கிமேவுக
      பால மேநிறை கொல்கதாவிடம்
 
   அடையக் கசந்த கள்ளைத் தந்தனர் - கொள்ளப்
      பரமற் கிருந்ததில்லை சிந்தையே
   குருசிற்பெரிய வாணி யுருவப் பரமனேசு
   குருவைக் கையொடு காலறைந்தனர் - அவர்
   உடையைப் பகிரவே விரைந்தனர் - அந்தக்
      கோதி லாத குமரனை யன்றிவர்
      யூத காவல னென வரைந்ததைக்