பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 139

New Page 1
   குருசிற் சிறந்தமிசை மாட்டினர் - ஏசு
      குரிசிற் புரிந்தபிழை காட்டினர்
   கிருபைக் குமரனோடும் இருபக்க மிருசோரர்
   கெழுமச் சிலுவையறை மேவினர் - வீரர்
   குழுமிப் புரியு நீடு காவலர் - அங்கே
      கேசகம்பித பாதசாரிகள்
      கீழிறங்கும கேசனேயெனில்
 
   கிருதிற் கோயிலழித்த பின்றைநாள் மூன்றில்
      நிருமிப் பாயுனை ரட்சி யென்றனர்
   அவரைப் போலவே யூத குரவப் பாரகமூதர்
   இவனிப்போ திறங்குக நம்புவோம் - இவன்
   அயலுக்கே புரந்த வரம்பினான் - முனம்
      ஆண்ட வன்கரம் நம்பி னானவர்
      வேண்டிலின்று மிரங்க வேயென
 
   அருகிற் சிலுவையிடச் சோரனும் - அந்த
   அறுமிக்க மணியாதி நவமுற்ற மணிகாறும்
   அவனிக்கிருள் பரக்கத் தேவனை - ஏசு
   அகதிப் படவுரக்கக் கூவினர் - சிலர்
      வகையிற் பழிமொழியைக் கூறினன்
      அகவினா னெலியாவை யென்னவோர்
      மகனறாவுறு காடி தன்னையே
 
   அவருக்கொரு கழையில் நீட்டினன் - அவர்
      அகவித் தமதுயிரை வீட்டினர்
   வலமைத் தேவக நீடு திரையிற் கீழ்வரை கீள
   மகிமிக்கே யதிர்ந்தது கம்பமாய் - பெரு
   மலைமிக்கே பிளந்தன துன்பமாய் - பல
      வால மாதவர் உயிர்த்தெழுந்தபின்
      சால மாநகரிடைத் தெரிந்தனர்
 
   மகிமைக் காரியமாகக் கண்டவர் - இவர்
      அருமைத் தேவகுமாரன் என்றனர்
   சரணப் பணிவிடைகள் புரியப் பரமனோடு
   சதுரக் கலிலேயாவை நீங்கின - பல
   மகரக் குழையமாதர் ஏங்கினர் - கதிர்
      சாயும் வேளை யோசேப்பு நம்பனின்
      காய மோது பிலாத்து வுந்தரத்