பக்கம் எண் :

146செந்தமிழ்க் காஞ்சி

   பருமன் மிகுமட மாமதப் பாதகர் பட்டினியிற் குட்டிக்
   கருமன் வினைக் கரமே கொடு மோதவும் கன்னஞ்செனி கன்னித்
   திருகும் வெயிற் பசிதாகமும் தீராமல் தேக மெலிவாகத்
   திருடன் போலச் சிலுவையறை யுண்டதும் தீயேனென் னாலன்றோ!

39
சுவிசேடகன் கிறித்தியானுக்குச் சிலுவையைக்
காட்டிச் சொல்வது

'கதர்க்கப்பல் கொடி தோணுதே' என்ற மெட்டு

வசந்தா - முன்னை (ஆதி)

    (நாதநாமக்கிரியை - ஆதியிலும் பாடலாம்)

 

ப.

 
     
  பவச்சுமை தாங்கி பாரதோ!  
  பரும்பின்மேல் ஏசுகிரு பாகரன் சமாதியோரம்  
     
 

து. ப.

 
     
  பாவியிளைப் பாறுந்தானம்  
     பரிசுத்தாவி யாதீனம்  
  சீவியப்பிர சாதபானம்  
     சிறந்த கற்பகங்கானம்

(பவச்)

     
 

உ.

 
     
   1. வருந்திச் சுமக்கும் பாவி வகுந்து1 விரைந்து மேவி  
  பொருந்திச் சிலுவை சேவி புரண்டுபோம் பாரந் தாவி  
  புனை2 மாறும் பண்டை  
  வினைபாறும்  
  புத்தகம்பின் பாதை கூறும்

(பவச்)

     
   2. தேவமறி தாகங்கொண்டு தேடிவந் தன்பாய்த் திரண்டு  
  பாவியுனக் காகவன்று பாடுபட்டுத் தேகம் நைந்த  
        பலிக்கம்பம் வெற்றிக்  
        கொடித்தம்பம்  
        பக்கம் சென்றாலும் பேரின்பம்

(பவச்)

     
 

1. வகுந்து - வழி. 2. புனை - ஆடை.