பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 147

40 உய

40
உயிர்த்தெழுதல்

‘தசரத ராஜ குமாரா‘ என்ற மெட்டு

கதிரவன் நாளதிகாலே

   

   மரி யாளே             பரி வாலே           விரை வாளே
 
      கல்லறை வெறுமையாக் கண்டனள் முனமே
      கர்த்த னுயிர்த்தா ரென்று கழறுந் தேவினமே
      மெல்லிய லழுதுபின் மீளுறு கணமே
          மேசையன் வடிவென்று கொண்டார்
 
   அயல் நின்றார்         மரி யென்றார்         தமை விண்டார்
 
      ஏசு மறைந்தவுடன் இன்புறு மரியாள்
      ஏகினள் சீடரிடம் இமையதுந் தரியாள்
      தேசுறு மகிழுரை தெரிப்பதற் குரியாள்
          தேவ மகிமையறி சீடர்
 
   மகிழ் கூட             நடமாடத்            துதிபாட
 
      எம்மா வூருக்கிருவர் ஏகினர் சீடர்
      இடைவிழ மருவினர் ஏசுவுங் கூடத்
      தம்மா லியன்றவரை தகவுரை யாடத்
          தமையறியாது வழிபோகும்
 
   பெரு வேகம்           கதி ரேகும்           இருளாகும்
 
      கோமக னுரைகளைக் கோளாளர் தெரிந்தார்
      கூறிய போதேயுளங் கொழுந்துவிட் டெரிந்தார்
      சேம விடியல்வரச் செல்லுமென் றிரந்தார்
      தேசிகனு மிணங்கி யிருந்தார்
 
   ஒரு விருந்தார்          முற்று மருந்தார்       உருக் கரந்தார்