| மரி
யாளே பரி வாலே விரை வாளே |
| |
|
கல்லறை வெறுமையாக் கண்டனள் முனமே |
|
கர்த்த னுயிர்த்தா ரென்று கழறுந் தேவினமே |
| மெல்லிய
லழுதுபின் மீளுறு கணமே |
| மேசையன்
வடிவென்று கொண்டார் |
| |
| அயல்
நின்றார் மரி யென்றார் தமை விண்டார் |
| |
|
ஏசு மறைந்தவுடன் இன்புறு மரியாள் |
|
ஏகினள் சீடரிடம் இமையதுந் தரியாள் |
|
தேசுறு மகிழுரை தெரிப்பதற் குரியாள் |
| தேவ
மகிமையறி சீடர் |
| |
| மகிழ்
கூட நடமாடத் துதிபாட |
| |
|
எம்மா வூருக்கிருவர் ஏகினர் சீடர் |
|
இடைவிழ மருவினர் ஏசுவுங் கூடத் |
|
தம்மா லியன்றவரை தகவுரை யாடத் |
|
தமையறியாது வழிபோகும் |
| |
| பெரு
வேகம் கதி ரேகும் இருளாகும் |
| |
|
கோமக னுரைகளைக் கோளாளர் தெரிந்தார் |
|
கூறிய போதேயுளங் கொழுந்துவிட் டெரிந்தார் |
| சேம
விடியல்வரச் செல்லுமென் றிரந்தார் |
| தேசிகனு
மிணங்கி யிருந்தார் |
| |
| ஒரு
விருந்தார் முற்று மருந்தார் உருக் கரந்தார் |