| நாதாந்தத்
தெய்வமென்னை நாடிவந்த தெய்வம் |
|
நம்பனிடத் துயிரொளியும் நண்ணியமெய்த் தெய்வம் |
| ஏதேன்றன்
இறைவன்பணி எதிருரைத்த தெய்வம் |
|
ஈசனடி யார்களுமுன் இசைத்தபெருந் தெய்வம் |
| வேதாந்த
சூரியனாய் விளங்கியமெய்த் தெய்வம் |
|
வியனிலத்தில் மாமிசமாய் விளைந்தமகத் தெய்வம் |
| போதாந்தம்
படவருக்கே புகன்றளித்த தெய்வம் |
|
பூமியெங்குந் திரிந்துநலம் புரிந்தபெருந் தெய்வம். |
| |
| மனந்திரும்பும்
அரசுரைவாய் மலர்ந்தபெருந் தெய்வம் |
|
மறுவுடையு மில்லாமல் வறுமைகொண்ட தெய்வம் |
| தினந்தினமும்
நடந்துபதம் தேய்ந்துளைந்த தெய்வம் |
|
சிரஞ்சாய்க்க இடமின்றிச் சிரமமுற்ற தெய்வம் |
| இனஞ்சனமாய்ப்
பாவிகளை ஏற்றபெருந் தெய்வம் |
|
ஈனருடன் விருந்துண்ட எளியவரின் தெய்வம் |
| சினஞ்சிறிய
வருக்குமிகச் சேவைசெய்த தெய்வம் |
|
சீடரடி கழுவியவர் செருக்கழித்த தெய்வம். |
| |
| பட்டினியாய்ப்
பசிதாகம் பரந்தெழுந்த தெய்வம் |
|
பலமான வாரடியும் பட்டபெருந் தெய்வம் |
| குட்டிமிகு
பாதகரும் குறைவுறுத்த தெய்வம் |
|
கோரமிகுஞ் சிலுவையிலே கொலையுண்ட தெய்வம் |
| மட்டில்பெரும்
பகைவருக்கும் மன்னிப்புரை தெய்வம் |
|
மன்னுயிரைத் தன்னுயிர்போல் மதித்தபெருந் தெய்வம் |
| திட்டியிடச்
சோரனுமுன் சிறுமைசெய்த தெய்வம் |
| திருடனுக்கும்
பெரியபர தீசளித்த தெய்வம். |