பக்கம் எண் :

150செந்தமிழ்க் காஞ்சி

பட
   படமுடியாப் பாடுபட்டே பரிதபித்த தெய்வம்
      பாவியெனக் காருயிரும் பரிந்தளித்த தெய்வம்
   சடமுடனே உயிர்த்தெழுந்த சத்தியமாந் தெய்வம்
      தரிசனமுஞ் சீடருக்குத் தந்தபெருந் தெய்வம்
   படருமொளி மேகமிசை பரத்தெழுந்த தெய்வம்
      பரமவலம் வீற்றிருந்து பரிந்துரைக்குந் தெய்வம்
   திடமுறவே யெனையாண்ட திருக்குமர தெய்வம்
      திருவருளைச் சிறந்தளிக்கும் திவ்வியமெய்த் தெய்வம்.
 
   தானாகித் தனியாகித் தழைத்தபெருந் தெய்வம்
      தனக்கெனவா ழாதபெருந் தனிக்கருணைத் தெய்வம்
   கோனாகிக் குருவாகிக் கூறுவிக்குந் தெய்வம்
      கொடியனெனை யாளுகந்து கொண்டாடுந் தெய்வம்
   ஊனாகி யுயிராகி உள்ளமர்ந்த தெய்வம்
      உடம்பிறப்பு முறையுமெனக் குவந்தளிக்குந் தெய்வம்
   தேனாகித் தெளிவாகித் தெவிட்டறியாத் தெய்வம்
      திருவலமன் றாடுகின்ற தெய்வமதே தெய்வம்.

44
நெஞ்சோடு கூறல்

புரிகல்யாணி - சாப்பு

   ஏசு தேவனே இந்நிலத் தார்பலர்
   ஏசு மேழையாய் இன்னுயிர் ஈந்ததால்
   நீச நாயன நீயும்பின் பேரின்ப
   வாச னான வகைநினை மனமே.
 
   பாடு பட்டிரும் பாரச் சிலுவையிற்
   கூடு விட்டிகங் குலையுங் கோமகன்
   கேடு கெட்டறக் கீழான வுன்னையும்
   வீடு விட்ட விதம்தெரி மனமே.