| காவு
பாரத்தைக் கடிதி லகற்றியே |
| தாவம்
நீடுயிர்த் தண்ணீரி லாற்றுவென் |
| பாவி
காளெனப் பரிந்தழைக் கும்பரன் |
| ஆவ லெண்ணியும்
அறிதியோ மனமே. |
| |
|
பொன்னைத் தானியப் பூமியைக் கானடை |
| தன்னைப்
பேணிலாத் தற்பரன் எண்மையில் |
| உன்னை
வேண்டவும் உறழுதியோ நெஞ்சே |
| என்னைப்
பேதமை இனைய வருளரே. |
| |
| தூண்டி
லின்பமே துவன்று முலகுனை |
| ஆண்டு
கொள்ளவும் ஆசைப் படுதியே |
| நீண்ட
இன்பமே நின்னை யுறுத்தவும் |
| வேண்டு
மேசுவை விடுவதோ மனமே. |
| |
|
விரும்பி யாவையும் விட்டுனைக் கண்கணீர் |
|
அரும்ப ஏசுவும் ஆனந்த மேந்தினர் |
|
கரும்பு தின்னவுங் காமறு வாரெவர் |
|
இரும்பு கல்பிற இளகுவ மனமே. |
| |
| மலைவ
ருந்துயர் மாயுங் கதிர்ப்பனி |
| அலைவ
ரும்பகை ஆயிரர் என்செய்வர் |
| தலைவ
ருந்திருத் தள்பவோ தாளினால் |
| துலைவ
ரும்ஏனம் துன்மன முனக்கே. |