காவு
பாரத்தைக் கடிதி லகற்றியே |
தாவம்
நீடுயிர்த் தண்ணீரி லாற்றுவென் |
பாவி
காளெனப் பரிந்தழைக் கும்பரன் |
ஆவ லெண்ணியும்
அறிதியோ மனமே. |
|
பொன்னைத் தானியப் பூமியைக் கானடை |
தன்னைப்
பேணிலாத் தற்பரன் எண்மையில் |
உன்னை
வேண்டவும் உறழுதியோ நெஞ்சே |
என்னைப்
பேதமை இனைய வருளரே. |
|
தூண்டி
லின்பமே துவன்று முலகுனை |
ஆண்டு
கொள்ளவும் ஆசைப் படுதியே |
நீண்ட
இன்பமே நின்னை யுறுத்தவும் |
வேண்டு
மேசுவை விடுவதோ மனமே. |
|
விரும்பி யாவையும் விட்டுனைக் கண்கணீர் |
அரும்ப ஏசுவும் ஆனந்த மேந்தினர் |
கரும்பு தின்னவுங் காமறு வாரெவர் |
இரும்பு கல்பிற இளகுவ மனமே. |
|
மலைவ
ருந்துயர் மாயுங் கதிர்ப்பனி |
அலைவ
ரும்பகை ஆயிரர் என்செய்வர் |
தலைவ
ருந்திருத் தள்பவோ தாளினால் |
துலைவ
ரும்ஏனம் துன்மன முனக்கே. |