பக்கம் எண் :

156செந்தமிழ்க் காஞ்சி

New Page 1

"மொழிஞாயிறு" தேவநேயப் பாவாணர்
வாழ்க்கைச் சுவடுகள்

   தி.பி.1933(1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கர நயினார்
    கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902)
    பிறந்தார்.
   தந்தை : ஞானமுத்து
   தாய் : பரிபூரணம்
   தி.பி.1938(1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி
   தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்
    பள்ளி.
   உயர்நிலைக்கல்வி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை,
    திருச்சபை விடையூழிய உயர்நிலைப்பள்ளி (9,10,11
    - வகுப்பு)
   தி.பி.1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம்,
    சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப்
    பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார்.
   தி.பி.1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப்
    பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி
    ஆசிரியராய்ப் பணியாற்றினார்.
   தி.பி.1955(1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச்
    சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி
    பெற்றார்.(இவ் வாண்டில் பாவாணரைத் தவிர
    வேறொருவரும்வெற்றி பெறவில்லை).
    "கிறித்தவக் கீர்த்தனம்" - நூல் வெளியீடு.
    உதவித் தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக்
    கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில்
    பணியாற்றினார்.
   தி.பி.1956(1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி
    உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.
    "சிறுவர் பாடல் திரட்டு" நூல் வெளியீடு.
   தி.பி.1957(1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம்
    நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே
    வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது