பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 157

   தி.பி.1959(1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே
    கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.
    முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு.
   தி.பி.1961(1930) : நேசமணி அம்மையாரை மணந்தார்.
   தி.பி.1964(1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உய்ாநிலைப்
    பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றினார்.
   தி.பி.1968(1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக்
    கொண்டு - "செந்தமிழ்க்காஞ்சி" நூல் வெளி
    யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார்.
    "கட்டுரைக் கசடறை என்னும் வியாச
    விளக்கம்" நூல் வெளியீடு.
   தி.பி.1971(1940) : "ஒப்பியன் மொழிநூல்" முதற்பாகம்
    "இயற்றமிழ் இலக்கணம்" ஆகிய நூல்கள்
    வெளியீடு.
    "கட்டுரை வரைவியல்" என்னும் உரைநடை
    இலக்கண நூல் வெளியீடு.
   தி.பி.1972(1941) : "தமிழர் சரித்திரச் சுருக்கம்" வெளியீடு ;
    தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி.
    "தமிழன் எப்படிக் கெட்டான்" ஆகிய நூல்கள்
    வெளியிடல்.
   தி.பி.1973(1942) : தலைமைத் தமிழாசிரியர், செனை முத்தியாலுப்
    பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.
    கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார்.
   தி.பி.1974(1943) : "சுட்டு விளக்கம்" - நூல்வெளியீடு.
    -பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை
    பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில்
    பங்கேற்று உரையாற்றினார்.
   தி.பி.1975(1944) : சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.)
    பட்டம் பெற்றார்.
    - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக்
    கல்லூரியில் பணியாற்றினார்.
    - "திரவிடத்தாய்" - நூல் வெளியீடு.
   தி.பி.1980(1949) : "சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்"- நூல்
    வெளியீடு.
    பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார்
    சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
    பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு
    பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி
    யில் பயின்றார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.