'என்னருமைக்
குஞ்சுகளாம்' என்ற மெட்டு.
| 1. |
தோட்டத்திலே
பூப்பறிக்க |
| |
கூட்டமாக
வாரும் |
| |
பாட்டுப்
பாடிப் பலமலரைக் |
| |
கூட்டிக்
கூட்டிச் சேரும். |
| |
|
| 2. |
மல்லிகையும்
மருக்கொழுந்தும் |
| |
வாசமான
ரோஜா |
| |
நல்ல நல்ல
மருகுடனே |
| |
நலமாகப்
பறிப்போம். |
| |
|
| 3. |
கிண்ணம்போல
வண்ணமாகக் |
| |
கிளையிலுள்ள பூவை |
| |
கண்ணிகண்ணி
யாகக்கட்டி |
| |
கழுத்திலேநாம்
அணிவோம். |
| |
|
| 4. |
ஊதுகிற குழல்போல |
| |
உள்ள
நல்ல பூவை |
| |
ஊதியதன்
உள்ளிருந்தே |
| |
ஒழுகும்
தேனைக் குடிப்போம் |
| |
|
| 5. |
வானத்து
நக்ஷத்திர |
| |
வகைபோன்ற
பூவை |
| |
ஏனத்தில்
பறித்திடுப்பில் |
| |
இடுக்குவோமே
வாரும். |
| |
|
| 6. |
அடுக்குமல்லி
சாமந்தி |
| |
அலரிஇவை
எல்லாம் |
| |
தொடுத்துடனே
மாலையாகத் |
| |
தொங்கவிட்டுப்
பார்ப்போம். |
| |
|
| 7. |
கம்மல்
போன்ற பூக்களைநாம் |
| |
கனமாகப்
பறித்து |
| |
பொம்மை
காதில் ஒட்டிஒட்டிப் |
| |
போட்டழகு
பார்ப்போம். |
| |
|
| 8. |
கூட்டிச் சேர்த்த
பூவை எல்லாம் |
| |
கூடையிலே
கொட்டி |
| |
வீட்டுக்குப்போய்
அன்னையார்க்குக் |
| |
காட்டுவோமே
வாரும். |