|
9ஆம
9ஆம் பாடம்
மழைப் பாட்டு
இதற்குக் குறிப்பிட்ட
மெட்டு இல்லை, இசைந்தபடி பாடலாம்.
| 1. |
சார மழை
பெய்யுதே |
| |
சம்பாக்
கோழி கூவுதே |
| |
கூரை மேலே
மழைத்தண்ணீர் |
| |
கொள்ளக் கீழே விழுகுதே. |
| |
|
| 2. |
காடெல்லாம்
வெள்ளம் |
| |
மேடெல்லாம்
பள்ளம் |
| |
வீடெல்லாம்
சொட்டுச் சொட்டாய் |
| |
விழுந்த
நீரும் துள்ளும் |
| |
|
|
3. |
மின்னல் எல்லாம்
மின்னுதே! |
| |
மேலெல்லாம்
குளிருதே |
| |
அன்னை யண்டை அடுப்போரமாய் |
| |
அனலில்குளிர்
காயுவேன் |
| |
|
|
4. |
சுவரே இடியுதே |
| |
சுக்காங்கல்லும்
உருளுதே |
| |
அவரைக்கொடிப் பந்தல்
எல்லாம் |
| |
ஆடியாடி
அசையுதே |
| |
|
| 5. |
குமிழி எல்லாம்
பொங்குதே |
| |
கூட்டில்கிளி
தொங்குதே |
| |
அமளி செய்த
பெருச்சாளி |
| |
ஆடி
யோடித் திரியுதே |
| |
|
|
6.
|
மழைமழை ஓய்ந்து
போ |
| |
மடுவெல்லாம்
பாய்ந்து போ |
| |
அழகாகத்
தெருவெளியே |
| |
அணைகள் கட்டப்
போகிறேன். |
|
|
|