| 1. |
நாய்ஒரு
நல்ல பிராணி - அது |
| |
நன்றி
மறவாத நாற்கால் பிராணி. |
| |
|
| 2. |
ஓநாய் நரிஅதன்
இனமே - அது |
| |
பூனையைக்
கண்டதும் பொங்கிடும் சினமே. |
| |
|
| 3. |
நாக்கு நன்றாய்
மெதுமாகும் - அது |
| |
நக்கி நக்கி
நீரைக் குடிப்பதற்காகும். |
| |
|
| 4. |
நெஞ்சு பெரிதாக
இருக்கும் - அது |
| |
நெடுந்தூரம்
போகவே உதவியா யிருக்கும். |
| |
|
| 5. |
வாலில்
இருப்பது வளைவு - அது |
| |
மட்டை வைத்துக்
கட்டினாலும் மாறாது. |
| |
|
| 6. |
எசமானைக்
கண்டால் வாலாட்டும் - அதன் |
| |
நிசமான
மகிழ்ச்சியை நின்றாடிக் காட்டும். |
| |
|
| 7. |
ஊளை யிட்டுத்
துயர்கூறும் - அது |
| |
உறுமி உறுமியே
கோபத்தில் சீறும். |
| |
|
| 8. |
வீட்டைக்
காக்கும் சிலநாய்கள் - அவை |
| |
வேற்றாளைக்
கண்டாலோ விரைந்துமேல் பாயும். |
| |
|
| 9. |
வேட்டையும்
சிலநாய்கள் பிடிக்கும் - அவை |
| |
காட்டுப்
பன்றிகளின் கன்னத்தில் கடிக்கும். |
| |
|
| 10. |
நாயை வளர்ப்பது
நன்று - அது |
| |
நம்பத்தக்க
காவல்காரருள் ஒன்று. |