3. உறுதிச் சுற்றத்தார் என்னும் நல்வாழ்வுத் துணைவர்: நட்பாளர், அந்தணாளர் (முனிவர்), மடைத்தொழிலாளர் (சமையற்காரர்), மருத்துவர், குறிகாரர் (கணியர், புள்ளுரைப்போர், விரிச்சிகர் முதலியோர்)
4. உயிர்காப்புத் துணைவர்: மெய்காவலர், வேளைக் காரர் என்னும் உற்றிடத்துதவிகள்.
5. உடன்கூட்டத்தார் அல்லது உழையர்: தலைமையமைச்சர், கருமத்தலைவர், குற்றேவலர் முதலியோர் அரசன் கட்டளையை நிறைவேற்றுவார். அரசன் கட்டளையை அருகிருந்து கேட்பவன் திருவாய்க்கேள்வி. திருவாய்க் கேள்வி சொன்ன அரசன் கட்டளையை ஓலையிற் குறித்துக்கொள்பவன் திருமந்திரவோலை. திருமந்திர வோலையர்க்குள் தலைமையானவன் திருமந்திரவோலை நாயகம். அரசன் கட்டளைகளை உடனுடன் அவரவர்க்கு அனுப்பி வைப்பவன் விடையிலதிகாரி. இவ் வினையில் ஈடுபட்ட கணக்கர் விடையிலார்.