பக்கம் எண் :

152மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

பள்ளியிற் கூறியது நகைச்சுவையுயர்வுநவிற்சியேனும், ஓரளவு பொருளுள்ளதே.

  இலக்கியச் சிறப்பில்லாவிடினும், மொழிச் சிறப்பு நோக்கி யேனும், இந்தி தமிழரெல்லாருங் கற்கத் தகுந்த மொழியன்று. முந்து திரவிடமான பிராகிருத வழிவந்த இந்தியில், தமிழ்ச் சொற்கள் எந்த அளவில் திரிந்துள்ளன என்பது, கீழ்வருஞ் சொற்களால் தெரியவரும்.

மூவிடப் பெயர்


  தன்மை: நான் - மைன், நாம் - ஹம்

  குறிப்பு: நாம் - மேமு என்று தெலுங்கிலேயே நகரம் மகரமாய்த் திரிந்துவிட்டமை காண்க.
  நாம் - ஆம் - அம் - ஹம். ஒ.நோ: ஆம்
(yes) - வ. ஆம் - இ. ஹாங்.
  முன்னிலை: நூன் - தூ, நூம் - தும்.

குறிப்பு: ஊன், ஊம் (முதல் நிலை) - உன், உம் (வேற்றுமையடி)
நூன், நூம் (2ஆம் நிலை) - நுன், நும் (வேற்றுமையடி)
நீன், நீம் (3ஆம் நிலை) - நின், நிம் (வேற்றுமையடி)
இந்திச் சொற்கள் 2ஆம் நிலையின் திரிபு. நகர முதல் தகர முதலானது. ஒ.நோ: நேரம் - தேரம் (இழிவழக்கு) - இ.தேர். ஒருமைச் சொல்லில் ஈறு கெட்டது; பன்மைச் சொல்லில் முதல் குறுகிற்று.

படர்க்கை

அண்மை - ஈ - ஏ - யஹ் (இவன், இவள், இது)
முன்மை - ஊ - ஓ - வஹ் (அவன், அவள், அது)
சேய்மை-ஆ-அவ்-வ-வெ-வே (அவர், அவை)

குறிப்பு: சுட்டெழுத்துகள் ஆ, ஈ, ஊ என மூன்றே. இவையே ஆரிய மொழிகளிலுள்ள எல்லாச் சுட்டுச் சொற்கட்கும் மூலம்.

சில சுட்டுச்சொற்கள்
எ-டு: இதோள் - இதர் (அண்மை)
உதோள்- (முன்மை) - உதர் (சேய்மை)
இத்தனை - இத்ன (அண்மை)
இப்போது (-இப்போ - இப்ப) - அப் (அண்மை)