நிறுத்தக்குறிகள், சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல், சந்தி ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; கருத்துத் தெளிவிற்குத் துணைபுரிபவை. ஆனால் மரபு இலக்கணங்களில் இடம்பெற்றிருப்பது சந்தி மட்டுமே. ஏனென்றால், தமிழில் சொல் உருவாக்கமும் சொற்களுடன் விகுதிகள் இணைவதும் சந்தி விதிகளை (பெரும்பாலும் அகச்சந்தியை) சார்ந்திருக்கின்றன. நான்காவதாக இடம்பெற்றிருக்கும் சொல் தேர்வும் பொருள் தெளிவும் என்பது நிறுத்தக்குறிகளாலும் சொற்களின் |