‘ஆதாரங்கள் மாணவனுக்கு ஒன்று குழப்பம் தரும்’ என்பது சரி. ஆனால், ‘ஆதாரங்கள் மாணவனுக்குத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்’ என்று இருக்க முடியாது. ‘மாணவனுக்கு... தவறான முடிவுகளைத் தரும்’ என்றோ ‘மாணவனைத் தவறான முடிவுக்கு இட்டுச்செல்லும்’ என்றோ இருப்பது பொருத்தமானது. |
2.2.5 செயப்பாட்டுவினை |
செயப்பாட்டுவினை வாக்கியத்தின் சில பகுதிகள் செய்வினை அமைப்பிலேயே இருக்குமானால் வாக்கிய ஒழுங்கு குலைகிறது. |
|
| (45) விளம்பரங்களில் உண்மையை மட்டுமே சொல்லப்பட வேண்டும் என்பதை சிங்கப்பூர் அரசு கட்டாயமாக்கும். |
‘சொல்லப்பட’ என்று செயப்பாட்டுவினையாகப் பயன்படுத்த வேண்டுமானால் ‘உண்மையை’ என்று இருக்க முடியாது. ‘...உண்மை - சொல்லப்பட வேண்டும்’ என்பதே செயப்பாட்டுவினை வாக்கியத்தின் ஒழுங்கு. |
| (46) இதைத் தனியார் துறை உளவியல் மருத்துவமனைகளுடன் இணைத்துப் பார்த்துப் புரிந்துகொள்ளப்படுதல் வேண்டும். |
‘புரிந்துகொள்ளப்படுதல்’ என்ற செயப்பாட்டுவினையிலேயே வாக்கியம் இருக்க வேண்டுமானால் ‘இதை’ என்பது ‘இது’ என மாற்றப்பட வேண்டும். அல்லது ‘இதை’ என்பது இருக்க வேண்டுமானால் ‘புரிந்துகொள்ளுதல்’ என மாற்ற வேண்டும். பின்வரும் இரு எடுத்துக்காட்டுகளிலும் செயப்பாட்டுவினை மாற்றம் முழுமையாக நிகழவில்லை. |
|
| (47) வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். |
‘வெள்ளம்’ பாதித்த ...’என்றோ ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...’ என்றோ இருக்க வேண்டும். |
| (48) புலிகளிடம் 140 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். |
‘புலிகளிடம்’ என்றால் ‘சிறைப்பட்டனர்’ என்று வினைமுற்று மாற்றப்பட வேண்டும். ‘சிறைபிடிக்கப்பட்டனர்’ என்று செயப்பாட்டு வினைமுற்றை வைத்துக்கொண்டால் ‘புலிகளால்’ என்று மாற்ற வேண்டும். |