பக்கம் எண் :

131

பதினெட்டாம்படிக் கருப்பசாமி

இறுதிக்குறிப்புக்கு எடுத்துக்காட்டு

    
     ஒன்றிரண்டின் பிரதிநிதியாகச் சில சிறுதெய்வங்கள் தோன்றியுள்ளன என்று கருதலாம்.

     “பழைய வழிபாட்டுநெறிகள் வலிமையினால் அழிக்கப்படவில்லை. அவை
தன்மயமாக்கப்பட்டன” என்று கோசாம்பி கூறும் கருத்தும்,65 முற்கூறிய கருத்தை அரண்
செய்கிறது.

     தமிழ்நாட்டில் காரி வழிபாடும், காபாலிகரின் சிவவழிபாடும் இன்று காணப்படவில்லை.
எனினும் அவை சிறுதெய்வ நெறிகளால் தன்மயமாக்கப்பட்டு, புதிய வடிவங்களைத்
தந்துள்ளன என்று கருதலாம்.

     ‘கருப்பசாமி ஒரு காவல் தெய்வம்’ என்று கருத்தும், காரி வழிபாட்டிலிருந்து பிறந்த
கருப்பசாமிக்குச் சுடலைமாடன் சைவ இணையாகலாம் என்ற கருத்தும் கருப்பசாமியின்
தோற்றம் குறித்து முற்கூறிய கருத்தை வலியுறுத்தவே துணைசெய்கின்றன.

     குறிப்புகள்

1. ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு, ப. 42.
2. மேலது, ப. 42.
3. ராக்காயி வர்ணிப்பு, ஆரப்பாளையம் மாரியப்பன் பாடியது. பார்க்க; பிற்சேர்க்கை எண்
11:7, வரிகள் 224-242.
4. K. N. Radhakrishna, Thirumalirunjolaimalai (Alagarkoil) Sthalapurana, p. 211.
5. ராக்காயி வர்ணிப்பு, அடி. 1.
6. பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு, பார்க்க: பிற்சேர்க்கை எண் II:5, வரி 1.
7. தகவல்; பெரியமஞ்சாக் கவுண்டர், ஆமந்தூர்ப்பட்டி, நாள்: 30-7-’77.
8. தகவல்; அழகு, மேலமடை, நாள்; 29-7-’77.
9. K. N. Radhakrishna, op. cit. pp. 213-214.
10. ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு, ப. 43.
11. பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு, பார்க்க: பிற்சேர்க்கை எண் 11:5.