ஒரே ஆசிரியரின் பல நூல்கள்/கட்டுரைகள்: | சிவசுப்பிரமணியமன் ஆ. 1983. “சிவகாசிக் கலகமும் நாட்டார் பாடல்களும்’, ஆராய்ச்சி, 22. ----------. 1984. அடிமை முறையும் தமிழகமும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். ---------- . 1988. “கழுகுமலைச் சிக்கலும் கௌசானலும்”, ஆராய்ச்சி, 27. |
ஆண்டு எண் இல்லை(ஆ.எ.இ.). | ராஜன் எஸ்.(ஆ.எ.இ.), புதிய மருந்துக் கொள்கை மக்கள் நலனா? கொள்ளை லாபமா? (சென்னை): சென்னை புக்ஸ். |
ஆண்டு எண் நூலின் தலைப்புப் பக்கத்தில் அல்லாமல் வேறு வகையில தெரியவருதல். | வையாபுரிப்பிள்ளை எஸ். (1952). இலக்கிய தீபம், சென்னை: பாரி . நிலையம். |
3.1.3 தலைப்பு |
பொதுத் தலைப்பை அடுத்து வரும் சிறப்புத் தலைப்பு நிறுத்தக்குறியீட்டைப் பெற்றிருந்தால் அவ்வாறே தரவும்: | சரோஜா வே. 1995. நாட்டுப்புற வரைதல் கலை (பச்சை குத்துதலும் கோலமும்), பெங்களூர்” காவ்யா. |
பொதுத் தலைப்பை அடுத்து வரும் சிறப்புத் தலைப்பு நிறுத்தக்குறியீடு பெறாதிருந்தால் இணைப்புச் சிறுகோட்டைப பயன்படுத்தவும்: | விஜயலட்சுமி கே. சுபாஷிணி ஸ்ரீதர். 1998. இயற்கைவழி வேளாண்மை - ஒரு தகவல் தொகுப்பு, சென்னை: இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம். |
நூலின் ஒரு பகுதி: | கோதண்டராமன் பொன். 1972. “பெயரெச்சம் பற்றித் தொல்காப்பியர்”, தொல்காப்பிய மொழியியல், (ப.ஆ.) ச. அகத்தியலிங்கம், க. முருகையன், அண்ணாமலைநகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம். |
தொடர் வெளியீடுகள்: | வையாபுரிப்பிள்ளை எஸ். 1993. தமிழர் பண்பாடு- கம்பன் காவியம், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், ஐந்தாம் தொகுதி, சென்னை: வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம். |
| |