பக்கம் எண் :

138

பக தொகுதிகளாகவெளிவந்த நூல்: செல்லப்பா சி.சு. 1997. சுதந்திர தாகம்,
 பாகம் 1-3, சென்னை: எழுத்து-வெளி வெளியீடு.
 
தலைப்பு உள்ள முகவுரை அல்லது முன்னுரையைக் காட்டுதல்: வேங்கடாசலபதி ஆ.இரா. 1994.
“கனவு மெய்ப்படுகின்றது” (முகவுரை),
பாரதியின் கருத்துப் படங்கள், சென்னை:
(விற்பனை உரிமை) நர்மதா பதிப்பகம்.
 
3.1.4 பதிப்பு
 
வெளியான நூலின் பதிப்பு எண் பல
தரப்பட்டிருந்தால் இறுதி பதிப்பைத்
தரவும்:
சிவஞானம் ம.பொ. 1965.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு,
மூன்றாம் பதிப்பு, சென்னை: இன்ப நிலையம்.
 
ஒரு பதிப்பின் மறுபதிப்பைக் குறித்த
தகவல் தருதல்
புறநானூறு. 1985. உ.வே.
சாமிநாதையரின் ஆறாம் பதிப்பின் மறுபதிப்பு,
தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
 
3.2 அகராதி, கலைக்களஞ்சியம்
 
அகராதியிலிருந்து ஒரு தகவலை
மேற்கோளாகக் காட்டுதல்
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
1994. மறுபதிப்பு இல்லை என்ற
சொல்லின் கீழ்.
 
கலைக்களஞ்சியத்திலிருந்து ஒரு
தகவலை மேற்கோளாகக் காட்டுதல்
அறிவியல் களஞ்சியம், தொகுதி மூன்று.
1987. ஆள்காட்டிக்கருவி என்ற
சொல்லின் கீழ்.
 
3.3. ஆய்வேடு, இதழ்கள்
 
ஆய்வேடுகளிலும் இதழ்களிலும்வெளியான கட்டுரையைக் காட்டுதல் பாலசுப்பிரமணியம் பெ. 1993.
மலேசியச் செவ்வழக்கு”,
தமிழியல்/Journal of Tamil Studies, எண் 43 & 44.

வசந்தி சீ. 1996. “பண்டைய ஓவியங்களும்
அவற்றைப் பாதுகாக்கும் முறைகளும்”, கலைமகள்
(தீபாவளி மலர்).

ராஜதுரை எஸ்.வி. “குற்றமும் தண்டனையும்”,
காலச்சுவடு, ஜனவரி-மார்ச், 1989.