பக்கம் எண் :

18

 
  28.09.1997
 
5.2 பின்வரும் இடங்களில் புள்ளி தேவை இல்லை.

5.2.1 ஒருவரின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படும் அடைமொழியை
அடுத்தும் அடைமொழிகளுக்கு இடையிலும்
 
  (அ) திருமதி விசாலாட்சி
திரு. ப. தங்கப்பன்
(ஆ) புங்கனூர் க. முருகேசன்
(இ) மணியக்காரர் சி. தங்கவேலு
(ஈ) அறிஞர் அண்ணா
முனைவர் இரா. சந்திரசேகரன்
(உ) செந்தமிழ்ச்செல்வர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை
 
5.2.2 எண்ணின் உட்பிரிவாக எழுத்து வரும்போது எண்ணுக்கும்
எழுத்துக்கும் இடையில்
 
  5 அ
5 a
 
6. முப்புள்ளி (...)

6.1 முப்புள்ளி இட வேண்டிய இடங்கள்:

6.1.1 வாக்கியத்தில் விடப்பட்ட பகுதியைக் குறிக்க
 
  (அ) “இது காவிய உத்திகளிலும் தவிர்க்க முடியாதபடி பிரிதிபலித்தது ...இவற்றை எல்லாம்
தொகுத்து நோக்கினால் காவியத்தின் பொதுப் பண்பு புலனாகும்.”
(ஆ) ஆஸ்தியில் பாதியை அழித்துவிட்டான். இன்னும் ...
(இ) அன்றிலிருந்து இன்றுவரை ...
(ஈ) அறையில் குடும்பமே கூடிவிட்டது. அம்மா, அப்பா, அக்கா ...
 
6.1.2 வாக்கியத்தின் இறுதியில் சிந்தனைத் தொடர்ச்சியைக் குறிக்க
 
  (அ) சிலவேளை இங்கே துபாயில்கூட அவன் இருக்கலாம் ...