பக்கம் எண் :

36

1. இலக்கண அமைப்பில் சொற்கள்
 
1.1 பெயர் + பெயர்
1.1.1 முதல் சொல் ஓரசையாகவும் அதில்
வரும் உயிர் குறிலாகவும் இருந்து (எ-டு கண்)
அடுத்து வரும் சொல் உயிரெழுத்தில்
தொடங்குமானால் முதல் சொல்லின் இறுதி
மெய்யெழுத்து இரட்டிக்கும். இவ்வாறு
இரட்டிக்கும்போது இரு சொற்களையும்
சேர்த்து எழுத வேண்டும்.

     கண்ணசைவு (கண்+ அசைவு)
     மண்ணாசை (மண் +ஆசை)
     மெய்யன்பு (மெய் + அன்பு)
     கல்லடி (கல் + அடி)
     உள்ளறை (உள் + அறை)

1.1.2 முதல் பெயர்ச்சொல் ஓரெழுத்தாக (பூ, தீ
போன்று) இருந்து அடுத்து வரும் சொல்
வல்லெழுத்தில் (க,ச,த,ப) தொடங்குமானால்
அந்த வல்லெழுத்து மிகும். இவ்வாறு
மிகும்போது இரு சொற்களும் சேர்த்து
எழுதப்படுகின்றன.

     தீச்சுடர்
     மாக்கோலம்
     பூச்செடி

 
 
1.1.3அ ஓரசை அல்லது ஈரசையாக இருக்கும்
முதல் சொல்லின் இறுதி எழுத்து
மெய்யெழுத்தாக இருந்தால் அடுத்து வரும்
சொல்லின் முதல் எழுத்தான உயிரெழுத்து
மெய்யெழுத்துடன் சேர்த்து (உயிர்மெய்
எழுத்தாக) எழுதப்படுகிறது. (சில தொகைச்
சொற்களில் மட்டுமே இவ்வாறு சேர்த்து
எழுதப்படுகிறது.)
1.1.3ஆ இரண்டாவது சொல்லால் முதல்
சொல்லின் இறுதியில் ஒற்று மிகும்போது
சொற்கள் இடம்விட்டு எழுதப்படுகின்றன;
முதல் சொல்லின் இறுதி எழுத்தும் அடுத்து
வரும் சொல்லின் முதல் எழுத்தும்
சேரும்போது மாற்றம் அடையும் என்பதால்
அந்த மாற்றம் தவிர்க்கப்படும் முறையில்