1.10 (செய்து) வினையெச்சம் + வினை 1.10.1 உகரத்தில் முடியும் செய்து என்னும் வினையெச்சங்கள் அவற்றின் பின் வரும் (உயிரெழுத்தில் தொடங்கும்) வினைச் சொற்களுக்கு நிகழ்வு நடந்த முறையைக் காட்டும் அடையாக வரும்போது பெரும்பாலும் சேர்த்து எழுதப்படுகின்றன. கேட்டறிந்தேன் (கேட்டு + அறிந்தேன்) தொட்டுணரலாம் (தொட்டு + உணரலாம்) உருண்டோடியது (உருண்டு + ஓடியது) 1.11 இரட்டைச் சொற்கள் 1.11.1 மரபாக இணைந்து வரும் பெயர்ச் சொற்கள், ‘உம்’ மறைந்து (உம்மைத்தொகையாக) வரும்போது சேர்த்தே எழுதப்படுகின்றன. செடிகொடி இலைதழை காய்கனி கணக்குவழக்கு கஷ்டநஷ்டம் கைகால் தாய்தந்தை 1.11.2 இரட்டித்து வரும் சொற்கள் சேர்த்தே எழுதப்படுகின்றன. சிறுசிறு திரும்பத்திரும்ப முத்துமுத்தாக | | | |
|
|