பக்கம் எண் :

44

2. தனிச் சொற்களை எழுதும் முறை
 

2.1 அ

அடுத்து வரும் சொல்லோடு இந்தச்
சுட்டெழுத்து சேர்த்தே எழுதப்படுகிறது.

     அக்காலத்தில்
     அச்சமயம்
     அத்தகுதி
     அவ்வூரில்

     (காண்க: 2.18, 2.32)
 
 
2.2அ அடை

‘உ’ வில் முடியும் சொற்களோடு இந்த
வினைச்சொல்லைச் சேர்த்தே எழுதலாம்.

    (அ) நான் வியப்படைந்தேன்.
    (ஆ) நாங்கள் சோர்வடைந்துவிட்டோம்.

2.3 அருகில், அருகே

‘உ’ வில் முடியும் சில சொற்களின் பின்
இவை சேர்த்து எழுதப்படுகின்றன.

     கதவருகில்
     கிணற்றருகே
2.2ஆ அடை

உயிரெழுத்தில் (‘உ’ தவிர) முடியும்
சொற்களின் பின்னும் மெய்யெழுத்தில்
முடியும் சொற்களின் பின்னும் இந்த வினைச்
சொல்லை இடம்விட்டு எழுதலாம்.


    (அ) நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
    (ஆ) நாங்கள் பெருமை அடைகிறோம்.
    (இ) நான் குழப்பம்
    அடைந்திருக்கிறேன்.