எழுத வேண்டும். (அ) நீதிபதி தீர்ப்பளித்தார். (ஆ) மக்கள் இவருக்கு ஆதரவளிப்பார்கள். | |
2.10அ அற்ற பெயர்ச்சொல்லுடன் இதைச் சேர்த்து எழுத வேண்டும். சிந்தனையற்ற பேச்சு மணமற்ற மலர் கவலையற்ற வாழ்க்கை | 2.10ஆ அற்ற பெயர்ச்சொல்லோடு அடை சேரும்போது இது பிரித்தே எழுதப்படுகிறது. (காண்க: 1.12.1ஆ) (அ) சுயசிந்தனை அற்ற ஒருவர் (ஆ) நறுமணம் அற்ற மலர் |
2.11 ஆகட்டும் ‘இருக்கட்டும்’ என்னும் பொருளில் பயன்படுத்தும்போது சேர்த்து எழுத வேண்டும். அதிகாரியாகட்டும் யாராகட்டும் விதியை மீறக் கூடாது. பேசுவதாகட்டும் எழுதுவதாகட்டும் நாணயம் இருக்க வேண்டும். | |
2.12அ ஆகாது ‘கூடாது’ என்னும் பொருளில் வரும்போது சேர்த்து எழுதப்படுகிறது. (அ) இதற்குக் கவலைப்படலாகாது. (ஆ) இவர்களுக்கு இரங்குதலாகாது. | 2.12ஆ ஆகாது ‘இல்லை’ என்னும் பொருளில் வரும்போது இடம்விட்டு எழுதப்படுகிறது. (அ) இவ்வாறு செய்வது குற்றம் ஆகாது. (ஆ) இது ஒரு சமாதானம் ஆகாது. |
2.13அ ஆகிய பொதுச் சொல்லுடன் சிறப்புச் சொல்லையோ அதன் பிரிவுகளையோ தொடர்பு படுத்தும்போது சேர்த்து எழுத வேண்டும். | 2.13ஆ ஆகிய ஒரு தொகுப்பாகக் கூறியதன் பின் வரும் போது தனித்து எழுத வேண்டும். |