பக்கம் எண் :

48

     (அ) ஆதினத் தலைவராகிய ஸ்ரீலஸ்ரீ
     சொக்கலிங்கத் தம்பிரான்
     (ஆ) பாலூட்டிகளாகிய பசு, நாய்
     முதலியவை
     (அ) கபிலர், பரணர் ஆகிய சங்கப்
     புலவர்கள்
     (ஆ) தமிழ், தெலுங்கு, மலையாளம்,
     கன்னடம் ஆகிய நான்கு மொழிகள்
 
2.14 ஆயிற்றே

‘ஆயிற்று’ என்பதோடு ‘ஏ’ இடைச்சொல்
சேர்ந்த இந்த வடிவத்தை முன்வரும்
சொல்லோடு சேர்த்து எழுத வேண்டும்.

     (அ) அவன் நல்லவனாயிற்றே.
     (ஆ) இது ஊர் அறிந்த ரகசியமாயிற்றே!
     (இ) அவ்வாறு செய்வது தவறாயிற்றே.

2.15 ஆயினும்

எல்லா வகைச் சொற்களின் பின்னும் இரு
வாக்கியங்களை ஒன்றாக்கும்போது முதல்
வாக்கியத்தின் பின்னும் இதைச் சேர்த்து
எழுத வேண்டும்.

     (அ) எதுவாயினும் நடக்கட்டும்.
     (ஆ) எந்த மதமாயினும் சம்மதம்.
     (இ) பழியாயினும் பாவமாயினும்...
     (ஈ) பிரபல நடிகர் நடிக்கவில்லை;
     ஆயினும்,
     படம் வெற்றிபெற்றுவிட்டது ->
     பிரபல நடிகர்
     நடிக்கவில்லையாயினும் படம்
     வெற்றிபெற்றுவிட்டது.

2.16 ஆனால்

ஒரு நிபந்தனையைக் குறிப்பிடும்போதும்
முரண்பட்ட நிலையைக் காட்டும்போதும்
சேர்த்து எழுத வேண்டும்.

     (அ) நீ வருவதானால் காத்திருக்கிறேன்.