பக்கம் எண் :

68

  இடம்விட்டு எழுதலாம்.

    (அ) அவரைப் போன்று பேசக்
    கூடியவர் ஒருவரும் இல்லை.
    (ஆ) கண் மங்குவது போன்று இருந்தது.
    (இ) மாங்காய் போன்று புளிப்புச் சுவை
    உடையது.
 
2.86 மட்டில்

‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின்
சேர்த்தே எழுதலாம்.

    (அ) எனக்குத் தெரிந்தமட்டில் அவன்
    நல்லவனே.
    (ஆ) அவரைப் பொறுத்தமட்டில்
    பிரச்சனை முடிந்தது.
 
 
2.87அ மட்டும்

‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின்
சேர்ந்தே எழுதலாம்.

எனக்குத் தெரிந்தமட்டும் சொல்லிவிட்டேன்.
2.87ஆ மட்டும்

‘செய்த’ போன்ற பெயரெச்சம் தவிர்ந்த பிற
சொற்களின் பின் இடம்விட்டே
எழுதப்படுகிறது.

    (அ) நீ மட்டும் போகலாம்.
    (ஆ) குழந்தைகள் மட்டும் இங்கே
    இருக்கலாம்.
    (இ) பணம் கொடுக்காமல் மட்டும்
    போய்விடாதே.
2.88 மயம்

பெயர்ச்சொற்களுடன் சேர்த்தே
எழுதப்படுகிறது.

    (அ) எங்கும் ஒளிமயம்
    (ஆ) தெருவில் குப்பைமயம்

2.89 மாட்டு

‘செ(ய்)ய’ என்னும் வினையெச்சத்தின் பின்
எதிர்மறையைக் காட்டும் இந்த வினையின்
வடிவங்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

’ரமாட்டேன்.