பக்கம் எண் :

62

   
  2.58 தகுந்த

இது தனித்தே எழுதப்படுகிறது.

படிக்கத் தகுந்த நூல்

2.59 தவிர

இதை இடம்விட்டு எழுத வேண்டும்.

    (அ) அம்மாவைத் தவிர வீட்டில்
    யாரும் இல்லை.
    (ஆ) தூங்கும் நேரம் தவிர மற்ற
    நேரங்களில் வேலை தான்.
    (இ) மழை பெய்ததே தவிர வெப்பம்
    தணியவில்லை.
 
2.60அ தான்

பொருள் அழுத்தம் தருவதற்குப்
பயன்படுத்தும்போது எல்லா விதமான
சொற்களுடனும் (உருபு அல்லது இடைச்சொல்
ஏற்ற சொற்களுடனும்) சேர்த்து எழுத
வேண்டும்.

    (அ) அவன்தான் என்னை அடித்தான்.
    (ஆ) அவளைத்தான் கேட்க வேண்டும்.
    (இ) அவனையேதான்
    பார்த்துக்கொண்டிருந்தேன்.
    (ஈ) அவரிடம் சொல்லத்தான் வேண்டும்.
    (உ) அவர் மறந்துவிட்டதாகவேதான்
    இருக்கட்டுமே.
 
2.60ஆ தான்

அவன், அவள், அது ஆகியவற்றிற்கு
மாற்றுப்பெயராக வரும்போது தனித்து எழுத
வேண்டும்.

    (அ) தான் சம்பாதித்துச் சேர்த்த பணம்
    என்று அவள் கூறினாள்.
    (ஆ) தான் ஈன்ற கன்றைப் பசு
    நக்கிக்கொடுத்தது.




 
2.61 தென்

அடுத்து வரும் சொல்லுடன் சேர்த்தே
எழுதப்படுகிறது.

    தென்கடல்
    தென்மேற்கு
    தென்மாவட்டங்கள்