பக்கம் எண் :

80

3. முதல் சொல்லின் இறுதி எழுத்து

எடுத்துக்காட்டு

தொடரும் சொல், விகுதி

சந்தி

விளக்கம்

       
துணி+கடை=துணிக் கடை

கத்தரி+செடி=கத்தரிச் செடி

குட்டி+பையன்=குட்டிப் பையன்

க,ச,த,ப மிகும் ‘துணியை விற்கும் கடை’
என வேற்றுமைத்
தொகையாகவும்
‘கத்தரியாகிய செடி’ என
இருபெயரொட்டாகவும்
பெயர்ச்சொல் அடையாகவும்
(எ-டு குட்டி) வரும்போது
ஒற்று மிகும்.
ஓடி+போ=ஓடிப் போ க.ச,த,ப மிகும் ‘ஓடி’ போன்ற (‘செய்து’
என்னும்) வினையெச்சத்தின்
பின் ஒற்று மிகும்
பற்றி+சொல்= (உன்னை) பற்றிச் சொல் க,ச,த,ப மிகும் ‘பற்றி’ என்பது வினையடை.
மாதிரி+படிவம்=மாதிரிப் படிவம் க,ச,த,ப மிகும் ‘மாதிரி’ என்பது
பெயர்ச்சொல்லாக இருந்து
மற்றொரு
பெயர்ச்சொல்லுடன்
இணையும்போது ஒற்று
மிகும்.
மாதிரி + பேசு=
(நடிகர்)மாதிரி பேசு

மாதிரி+செய்=
(சொன்ன) மாதிரி செய்

க,ச,த,ப மிகாது ‘மாதிரி’ என்பது ‘போல’
என்னும் பொருளில்
வரும்போது ஒற்று மிகாது.
படி+கொடு=
(கேட்ட) படி கொடு

படி+செய்=
(விருப்ப) படி செய்

க,ச,த,ப மிகாது ‘படி’ என்னும்

இடைச்சொல் ‘முறையில்’,
‘போல’ என்னும் பொருளில்
வரும்போது ஒற்று மிகாது.

செடி+கொடி=செடிகொடி க,ச,த,ப மிகாது செடியும் கொடியும்
என்பதில் ‘உம்’ இல்லாமல்
(உம்மைத் தொகையாக)
வரும்போது ஒற்று மிகாது.
குடி+தண்ணீர்=குடிதண்ணீர்

வெடி+பொருள்=வெடிபொருள்

க,ச,த,ப மிகாது முதற்சொல் வினையடியாக
இருக்குமானால்
(வினைத்தொகையில்) ஓற்று
மிகாது.
செடி+கள்=செடிகள் -கள்

‘க்’ மிகாது

‘-கள்’ பன்மை விகுதி.
மொழி+இயல்பு=மொழி இயல்பு

கோழி+இறகு=கோழி இறகு

உயிரெழுத்து ‘ய்’ இடையில் வருவதில்லை பெரும்பாலும் உடம்படுமெய்
தந்து எழுதுவதில்லை.