5. முதல் சொல்லின் இறுதி எழுத்து உ
எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் |
பாட்டு+கள்= பாட்டுகள்/பாட்டுக்கள்வாழ்த்து+கள்= வாழ்த்துகள்/வாழ்த்துக்கள் | -கள் | ‘க்’ மிகலாம் | -ட்டு,-த்து ஆகிய வற்றின் பின்‘-கள்’ விகுதி பெரும்பாலும் ஒற்று மிகாமல் வருகிறது; சில சொற்களில் ஒற்று மிகுவதால் பொருள் வேறுபடவும் காண்கிறோம். எழுத்துக்கள்’ letters; ‘எழுத்துகள்’ writings. |
கொசு+கள்=கொசுக்கள் அணு+கள்=அணுக்கள் தெரு+கள்=தெருக்கள் குழு+கள்=குழுக்கள் மனு+கள்=மனுக்கள் | -கள் | ‘க்’ மிகும் | சு,ணு,ரு,ழு,னு ஆகியவற்றில் முடியும் ஈரசைச் சொற்களின் முதல் உயிரெழுத்து குறிலாக இருந்தால்‘ -கள்’ விகுதி சேரும்போது ஒற்று மிகும். (ஈரசைச் சொற்களின் முதல் உயிர் நெடிலாக இருந்தால் ஒற்று மிகாது. எ-டு காசுகள்) |
கொலுசு+கள்=கொலுசுகள் தராசு+கள்=தராசுகள் | -கள் | ‘க்’ மிகாது | மூன்று அசைச் சொற்களில் ஒற்று மிகாது. |
ஆய்வு+கள்=ஆய்வுகள் | -கள் | ‘க்’ மிகாது | ‘வு’ என்பதில் முடியும் பெயர்ச்சொற்களின் பின் ‘-கள்’ விகுதி சேரும்போது ஒற்று மிகாது. |
தேக்கு+இலை= தேக்கிலை/தேக்கு இலைஅச்சு+இயந்திரம்= அச்சியந்திரம்/அச்சு இயந்திரம் சொத்து+உரிமை= சொத்துரிமை/சொத்து உரிமை நடப்பு+ஆண்டு= நடப்பாண்டு/நடப்பு ஆண்டு | உயிரெழுத்து | | -க்கு,-ச்சு,-த்து,-ப்பு ஆகியவற்றில் முடியும் பெயர்ச்சொற்களின் பின் உயிரெழுத்து வரும்போது முதலெழுத்தின் ‘உ’ விடப்பட்டு இணைத்து எழுதப்படுகிறது; ‘உ’ விடுபடாத நிலையில் தனித்து எழுதப்படுகிறது. (இருபத்து + ஆறு= இருபத்தாறு என்று எழுதுவது விளக்கத்தோடு ஒத்துப்போகும். எனவே, ‘இருபத்தியாறு’, ‘முப்பத்தி நான்கு’ என்று ‘இ’கர உயிரெழுத்து தந்து எழுதுவதைத் தவிர்க்கலாம்.) |