மதுரை+கல்லூரி= மதுரைக் கல்லூரிகீழை+தெரு=கீழைத் தெரு | க,ச,த,ப | மிகும் | இடப்பெயர்களின் பின்னும் திசைகளைக் குறிக்கும் சொற்களின் பின்னும் பெயர்ச்சொற்கள் வரும்போது ஒற்று மிகுவது வழக்கமாக இருக்கிறது. | பழத்தை+கடி=பழக்கத்தைக் கடி தண்ணீரை+சிந்து= தண்ணீரைச் சிந்து கதவை+தட்டு=கதவைத்தட்டு கையை+பிடி=கையைப் பிடி | க,ச,த,ப | மிகும் | இரண்டாம் வேற்றுமை உருபாகிய ‘ஐ’ என்பதன் பின் ஒற்று மிகும். இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்திருக்கும் பெயர்ச்சொல்லின் பின் வினைச்சொல் வரும்போது ஒற்று மிகாது. எ-டு மோர் குடித்தான். | அறிக்கையை+குஜராத் அரசு=அறிக்கையை குஜராத் அரசு குறும்படத்தை+சாகித்ய அகாதெமி= குறும்படத்தை சாகித்ய அகாதெமி | க,ச,த,ப | மிகுவ தில்லை | இரண்டாவது சொல் பிறமொழிச்சொல்லாகவும் ஒலிப்பு முறையில் வேறாகவும் இருக்குமானால் ஒற்று மிகுவதில்லை. | கை+கால்=கைகால் சண்டை+சச்சரவு= சண்டைசச்சரவு இலை+தழை=இலைதழை | க,ச,த,ப | மிகாது | ‘கையும் காலும்’, ‘சண்டையும் சச்சரவும்’, ‘இலையும் தழையும்’ என்பதில் ‘உம்’ இல்லாமல் (உம்மைத்தொகையாக) வரும்போது ஒற்று மிகாது. | கை+எல்லாம்=கையெல்லாம் நகை+எல்லாம்=நகையெல்லாம் வேலை+இன்மை= வேலையின்மை அரட்டை+அடி=அரட்டையடி உண்மை+ஆகு=உண்மையாகு தட்டை+ஆக்கு=தட்டையாக்கு | உயிரெழுத்து | ‘ய்’ இடையில் வரும் | ‘எல்லாம்’, ‘இன்மை’ போன்ற சொற்கள் பெரும்பாலும் சேர்த்து எழுதப்படுகின்றன. ‘அடி’, ‘ஆகு’, ‘ஆக்கு’ முதலிய வினைப்படுத்தும் வினைகளும் சேர்த்து எழுதப்படுகின்றன. | 9. முதல் சொல்லின் இறுதி எழுத்து ஓ எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | ஐயோ+என்று= ஐயோவென்றுஓகோ+என்று= ஓகோவென்று | உயிரெழுத்து | ‘வ்’ இடையில் வரலாம் | ‘ஐயோ என்று’, ‘ஓகோ என்று’ என உடம்படுமெய் ‘வ்’ இல்லாமல் எழுதுவதும் உண்டு. | |