பக்கம் எண் :

தொகைகள்42கி. செம்பியன்

உருபு மயக்கம்
கிழங்கு மணற்கு ஈன்ற முளை
எனும் தொடரில் மணலின்கண் என்று கண் உருபு வர
வேண்டிய இடத்தில் குவ்வுருபு வந்தது.
இவற்றின் விரிவினைத் தொல்காப்பியச் சொல்லதிகார வேற்றுமை
மயங்கியலில் பயிலலாம்.
  1. செய்யுளின்கண் வேற்றுமை உருபுகள் திரிந்துவருதல் உண்டு. காவலோனைக்
    களிறஞ்சும்மே என்பது காவலோனக் களறிஞ்சும்மே என 'ஐ' உருபு 'அ' வாகத்
    திரிந்து வந்தது.


  2. அ. ஐந்தாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் பெயர்ச் சொற்களைக்
       கொண்டு முடியும்:

    மலையின் வீழ் அருவி
    முருகனது வேல்
    அருவி, வேல் ஆகியன பெயர்ச் சொற்கள்

    ஆ. மற்ற எல்லா வேற்றுமைகளும் வினைச்சொற்களைக் கொண்டு முடியும்:
    அழகன் படித்தான் (எழுவாய்)
    ஆற்றைக் கடந்தான் (இரண்டு)
    கல்லால் அடித்தான் (மூன்று)
    முல்லைக்குத் (தேர்) கொடுத்தான்(நான்கு)
    அவையின்கண் இருந்தான் (ஏழு)
    இ. இவற்றுள் நான்கும் ஏழும் பெயர்ச்சொற்களைக் கொண்டும் முடியும்.
    எனக்கு மகன் (நான்கு)
    கையின்கண் விரல் (ஏழு)
    ஈ சிறுபான்மையாகத் தொழிற்பெயரையும் விணையாலணையும்
    பெயரையும் கொண்டு முடியும்.
    குடத்தை வனைதல் ( தொழிற்பெயர்)
    குடத்தை வனைந்தவன் (வினையாலணையும் பெயர்)