1. பூங்குழல் வந்தாள்
|
> |
பூவையுடைய குழலினை
உடையாள் வந்தாள் என
விரிவடைந்து, இரண்டாம்
வேற்றுமைத் தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை ஆகும். |
பொற்றொடி நின்றாள் |
> |
மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த |
கவியிலக்கணம் படித்தேன் |
> |
நான்காம் வேற்றுமைப் புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை;
இது கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட
நூல் என விரியும். |
கிள்ளிகுடி |
> |
கிள்ளியினது குடியிருக்கும்
ஊர் என விரிந்து ஆறாம்
வேற்றுமை புறத்துப் பிறந்ததாகும். |
கீழ்வயிற்றுக் கழலை சென்றான் |
> |
ஏழாம் வேற்றுமைப் புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை;
கீழ்வயிற்றின்கண்எழுந்த கழலை
போல்வான் சென்றான் என விரியும். |
2, தாழ்குழல் பாடினாள்
|
> |
வினைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை; தாழ்ந்த
குழலையுடைய பெண் பாடினாள் என விரியும். |