பக்கம் எண் :

தொகைகள்74கி. செம்பியன்

2. பயனிலை கொள்ளல் > யானைக்கோடு வலிமையானது
         ;             கொல்யானை நடந்தது

     நிலங்கடந்தான், குன்றத்திருந்தான் ஆகியனவற்றுள் முடிக்கும் சொற்கள்
வினைச்சொற்கள் (கடந்தான், இருந்தான்)
நிலங்கடந்தான் = பெயர்ச்சொல் + வினைச்சொல்
குன்றத்திருந்தான் = பெயர்ச்சொல் + (சாரியை) + வினைச்சொல்
இவை ஒரே சொல்லாய் நின்று வினைச்சொற்களுக்கு உரிய தன்மையைப் பெறும்.
வினைச்சொற்களின் தன்மைகளாவன இரண்டு:

1. பயனிலையாதல் > சேரன் நிலங்கடந்தான்
முருகன் குன்றத்திருந்தான்
2. பெயரைக் கொள்ளுதல் > நிலங்கடந்ததான் செங்குட்டுவன்
குன்றத்திருந்தான் முருகன்

சொற்கள் இணைந்து தொகையாகிப் பின்னர் ஒரு சொல் போலச் செயல்படும்.

ஆ கிடந்தது (எழுவாய் - 'ஆ' (பசு) - ஒரு சொல்)
யானைக்கோடு கிடந்தது (எழுவாய் - 'யானைக்கோடு'
(பசு)- ஒரு தொகை)

  • வேற்றுமைத் தொகையையும் உவமத் தொகையையும் தேவையானால் பிரித்து
    எழுதலாம்:
    தோற்செருப்பு > தோல் செருப்பு (வேற்றுமை)
    குவளைக்கண் > குவளைக் கண் (உவமை)
    பண்புத்தொகையையும் வினைத்தொகையையும் பிரித்து எழுதுதல் கூடா.

    தவறு செந் தாமரை பண்பு
    சரி செந்தாமரை
    தவறு சுடு சோறு வினை
    சரி சுடுசோறு