பக்கம் எண் :

வலிமிகாமைக்குரிய விதிகள் 243

16. வன்தொடர்க் குற்றியலுகரம் தவிர மற்றக் குற்றியல்
உகரங்களுக்குப் பின் வரும் வல்லெழுத்துப் பெரும்பாலும்
மிகுவது இல்லை.

கடுகு+சிறிது = கடுகு சிறிது.

உயிர்த் தெடர்க் குற்றியல் உகரத்துக்குப் பின் வலி மிகவில்லை.

செய்து+கொடு = செய்து கொடு.

இடைத் தொடர்க் குற்றியல் உகரத்துக்குப் பின் வலி மிகவில்லை.

எஃகு+கூர்மை = எஃகு கூர்மை.

ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரத்துக்குப் பின் வலி மிகவில்லை.

17. எழுவாய்த் தொடரில் வருமொழி க,ச,த,ப வருக்கங்களில்
உள்ள எழுத்துகளில் சொல் இருந்தால் வல்லெழுத்து மிகாது.

நீ பெரியை; வண்டி சிறியது; கோழி பெரியது;
நாய் தின்றது; காய் சிறியது; கூழ் போதாது.

18. முன்னிலை வினைமுற்று, ஏவல் வினைமுற்று, முற்றுவினை
இவற்றிற்குப் பின்வரும் வல்லினம் இயல்பாகும். அஃதாவது
வலி மிகாது.

வருதி குமரா!

முன்னிலை வினைமுற்றின் பின் வலி மிகவில்லை.

போ தம்பி!

ஏவல் வினைமுற்றின் பின் வலி மிகவில்லை