ஆண்பாலில் மட்டும் வரும் பெயர்கள்
குரிசில், தோன்றல், விடலை, நண்பன்.
குறிப்பு : நண்பனுக்குப் பெண்பால் நண்பி என்பது தவறு.
புலவனுக்குப் பெண்பால் இல்லை. புலவி என்பது தவறு புலவன்
என்னும் சொல்லுக்குப் பெண்பால் சொல்ல வேண்டுமானால் பெண்பாற்
புலவர் என்க.
பெண்பாலில் மட்டும் வரும் பெயர்கள்
செவிலி, தையல், மங்கை, மடந்தை.
குறிப்பு : இல்லாளுக்கு ஆண்பால் இல்லை என்பர். இல்லாளன்
என்பது ஆண்பால் ஆகும். விதவைக்கு ஆண்பால் இல்லை.
உயர்திணைப் பலர்பால்
அர், ஆர், இர்,ர், மார், கள் ஆகிய விகுதிகள் பெற்றுள்ள
பெயர்கள் உயர்திணைப் பலர்பாற் பெயர்களாகும்.
|
அர் -
|
தோழியர், நங்கையர்.
|
|
ஆர் -
|
தேசத்தார், தென்னகத்தார்.
|
|
இர் -
|
மகளிர்
|
|
ர் -
|
பிறர்
|
|
மார் -
|
தாய்மார்
|
|
கள் -
|
கோக்கள் (அரசர்கள்)
|
குறிப்பு : உயர்திணையில் பலர்பாலுக்கு அர், மார் விகுதிகள்
வரும்போது அவற்றுடன் கள் விகுதி சேர்த்து எழுதுதல் உண்டு.
அவர்கள், அரசர்கள், தம்பிமார்கள்.
அவர் அரசர் என்று எழுதும்போது இவற்றை மரியாதைப்
பன்மைகளாகக் கருதலாம். ஆதலால், அவற்றுடன் அவர்கள்
|