|
எ
எ-டு :
|
தென்சொல் |
வடசொல் |
வடவர்கூறும் மூலப்பொருள் |
|
இஞ்சிவேர்
|
ச்ருங்கவேர |
(மான்) கொம்புபோன்ற
வடிவுடையது. |
|
உலகு-உலகம்
|
லோக
|
பார்க்கப்படுவது. |
|
முத்து-முத்தம்
|
முக்த
|
(சிப்பியினின்று) விடுதலை
பெற்றது. |
|
வடம்-வடவை
|
படபா
(முகம்) |
பெட்டைக் குதிரை முகத்தில்
தோன்றியது (ஊழித்தீ) |
“காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா வுயர்திணை மேன’’
(கிளவியாக்கம், 58)
என்னும் தொல்காப்பிய நூற்பாவின் பொருளையுணர்ந்து உண்மை
தெளிக.
3.சமற்கிருதத்தைத் தாக்காது தமிழை வளர்த்தல் இயலாதென்பது
தமிழ் சிவமதமும் திருமால் மதமும் தோன்றிய ஒப்புயர்வற்ற
உலக முதல் உயர்தனிச் செம்மொழியா யிருந்தும், வழக்கற்றுப் போன கீழையாரியம் கடலிற் காய
முரசினது போல் வடநாட்டுப் பிராகிருதத்தொடு கலந்து போனதனாலாகிய வேத மொழியை, தமிழொடு
கலந்தாக்கிய ஒரு காலும் உலக வழக்கிலில்லாத இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தை, தேவமொழியென்று
ஏமாற்றி, வழிபாட்டிற்குத் தகாத இழிந்தமொழியென்று தமிழைத் தள்ளி, அதற்குத் தலைமாறாகத் திருக்கோவில்
வழிபாட்டு மொழியாகவும் திருமணக் கரணமுள்ளிட்ட சடங்கு மொழியாகவும், கடந்த மூவாயிரம் ஆண்டாக
ஆண்டு வருகின்றனர் ஆரியப் பூசாரியர்.
முதன் முதல் தோன்றிய குமரிநாட்டுத் தமிழெழுத்து, அசோகன்
கல்வெட்டுப் பிராமியெழுத்தினின்று தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது.
அடிப்படைத் தமிழ்ச்சொற்க ளெல்லாம் ஆரியச் சொல்லாகக்
காட்டப்படுகின்றன.
இசை நாடகம் கணியம் மருத்துவம் முதலிய தமிழறிவியல்க
ளெல்லாம், ஆரிய வண்ணமாக்கப்பட்டுள்ளன.
இருவகை அறநெறியும் அரசியல்
முறையும் இம்மையின்பமும் கூறும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை, இறந்துபட்டதாகக் கூறும்
|