New Page 2
செய்யான் = சிவந்தவன், செம்பூரான்.
செய் - சேய் = சிவப்பு, செவ்வாய்,
முருகன்.
சேய் - சேயது - சேய்து = சிவந்தது.
சேய்து - சேது.
சேது + ஆ = சேதா. சேது + ஆம்பல்
= சேதாம்பல்.
சேய் - சேயன் - சேயான் = செந்நிறத்தான்.
சேயவன் = செவ்வாய், முருகன்.
சேயோன் = முருகன், சிவன்.
சேய்-சே. சேத்தல் = சிவத்தல்.
சே = சிவப்பு, சேங்கொட்டை.
சே-சேத்து = சிவப்பு.
சேத்து - சேந்து = சிவப்பு, தீ,
அசோகு.
சேந்து - சேந்தன் = சிவந்தவனான
முருகன்.
சேந்தன் - சேந்து.
ஒ.நோ: வேந்தன் - வேந்து,
முருகன் - முருகு.
சேந்து + இல் = சேந்தில் - செந்தில்.
சேந்து + ஊர் = சேந்தூர் - செந்தூர்
(திருச்செந்தூர்).
செய் - செய்ம்மை - செம்மை - செவ்வை.
செம் - செவ் - செவ - செவப்பு.
செவ - சிவ - சிவப்பு - சிகப்பு.
சிவ - சிவல் - சிவலை.
சிவ - சிவம் - சிவன் = சிவந்தவன்,
நெருப்பின் கூறாக நின்று
உலகத்தை
இயக்கும் இறைவன்.
தீவண்ணன், அந்திவண்ணன், அழல்வண்ணன்,
மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.
சிவன் மாலை
குறிஞ்சிநிலத்திற்குரிய கொன்றை
மாலை. கொன்றை வேய்ந் தோன் - கொன்றை வேந்தன்.
சிவனூர்தி
குறிஞ்சிநிலத்திற்குரிய (வெண்)
காளை. அதன் வெண்ணிறம் தூய்மை குறித்தது.
|