துவர்ப்பூ = வாடிச்சிவந்த பூ."தன்றலைதங்கிய துவர்ப்பூ | |
வேற்றி" (பதினொ. திருக்கண்.மறம்.நக்.61) | |
துவர்வலியுறுத்தி = துவர்ப்பு மருந்து (Astringenttonic) | |
துவர் - துவரம் = துவர்ப்பு (பிங்.).துவரம் - வ. துவர. | |
துவர் - துவரி = 1.இலவம்பூ. | |
"துவரிக் கனிவாய் நிலமங்கை" | (திவ்.பெரியதி.8:8:9) |
2.காவிநிறம். | |
"துவரி யாடையர் மட்டையர்" | (திவ்.பெரியதி.2:1:6) |
துவரித்தல் = செந்நிறமூட்டுதல். | |
"துவரித்த வுடையவர்க்கும் | (திவ்.பெரியதி.5:6:8) |
துவர்-துவரை = 1. துவரம் பயறு. 2.துவரஞ்செடி. 3.காட்டத்தி. 4.கருந்துவரை. 5.செம்புருக்கி வார்த்துக் கட்டிய செப்புக் கோட்டை மதில். | |
"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு" | (புறம்.201) |
7.கண்ணன் ஆண்ட துவாரகை. வ. த்வாரகா. | |
துவரஞ்சம்பா=ஒரு நெல்வகை. | |
துவரைக்கோமான்=இடைக்கழகப் புலவராகச் சொல்லப்படும் | |
ஒருவர் (இறை.கள. உரை). | |