பக்கம் எண் :

தமிழர் வரலாறு-149

துவர் (சிவப்பு) - தெ. தொகரு, .தொகர்.

துவர் (துவர்ப்பு) - . துவர.

துவர்த்தல் = 1. சிவத்தல்."துவர்த்த செவ்வாய்"

(கம்பரா. நீர்விளை.13).2.துவர்ப்பாதல்.

துவர்ப்பு = 1. அறுசுவைகளுள் ஒன்று (பிங்.).

2.பத்து (துவர்ப்புப் பொருட்டொகை)(தைலவ.தைல.135)

துவராடை=காவியாடை. "அந்துவ ராடைப்பொதுவனொடு" 

(கலித்.102:35)

துவர்க்கட்டி = காசுக்கட்டி.

துவர்க்கண்டல் = செந்தாழை 

(தைலவ.தைல.135)

துவர்க்காய் = பாக்கு."துவர்க்காயொடு சுக்குத்தின்னும்"

(தேவா.660:10.)

துவர்ப்பூ = வாடிச்சிவந்த பூ."தன்றலைதங்கிய துவர்ப்பூ

வேற்றி" (பதினொ. திருக்கண்.மறம்.நக்.61)

துவர்வலியுறுத்தி = துவர்ப்பு மருந்து (Astringenttonic)

துவர் - துவரம் = துவர்ப்பு (பிங்.).துவரம் - வ. துவர.

துவர் - துவரி = 1.இலவம்பூ.

"துவரிக் கனிவாய் நிலமங்கை"

(திவ்.பெரியதி.8:8:9)

2.காவிநிறம்.

"துவரி யாடையர் மட்டையர்" 

(திவ்.பெரியதி.2:1:6)

துவரித்தல் = செந்நிறமூட்டுதல்.

"துவரித்த வுடையவர்க்கும்

(திவ்.பெரியதி.5:6:8)

துவர்-துவரை = 1. துவரம் பயறு. 2.துவரஞ்செடி. 3.காட்டத்தி. 4.கருந்துவரை. 5.செம்புருக்கி வார்த்துக் கட்டிய செப்புக் கோட்டை மதில்.

"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
யுவரா வீகைத் துவரை யாண்டு" 

(புறம்.201)

7.கண்ணன் ஆண்ட துவாரகை. வ. த்வாரகா.

துவரஞ்சம்பா=ஒரு நெல்வகை.

துவரைக்கோமான்=இடைக்கழகப் புலவராகச் சொல்லப்படும்

ஒருவர் (இறை.கள. உரை).