துவரைப்பதி - வ.த்வாரவதீ. துவர் - துகர் - துகிர் = 1. பவழம். "பொன்னுந் துகிரு முத்தும்" | (புறம்.218) |
2.பவழக்கொடி "செந்துகிர் படருந் திரைக்கடல்" | (கல்லா.முருக.வண.) |
துகிர் - தெ., க., து. தொகரு. துகிர்த்தாளி = பவழமல்லிகை (மலை.) துகிர் - துகில் = 1 செந்நல்லாடை. "பட்டுந் துகிலு முடுத்து" | (நாலடி.264) |
2. செந்துணிக்கொடி(பிங்.). துகில் - துகிலிகை= செந்துணிக்கொடி "புரிசைமேற் புனைந்தவா ணிலாநெடுந் துகிலிகை" | (கந்தபு.திருநகர.20) |
தும்பரம் - தம்பரம் - தாம்பரம் =செம்பு (பதார்த்த.1170) தாம்பரம் -வ. தாம்ர. தம்பரம் - தம்பர் = வெற்றிலை தின்றுசிவந்த எச்சில் (மாறனலங்.470, உதா.) தம்பரம்=தம்பலம்=1. வெற்றிலை தின்றுசிவந்த எச்சில். "தில்லைநல் லார்பொதுத்தம்பலங் கொணர்ந்தோ" (திருக்கோ.396)தெ.தம்ம. 2.வெற்றிலை பாக்கு. "தையால் தம்பலந்தின்றியோ" (கலித்.65) .3. தம்பலப் பூச்சி. தம்பலம் - வ. தாம்பூல. தம்பலப் பூச்சி = தம்பலம்போற்சிவந்த மூதாய். தம்பலம் - தம்பல் = வெற்றிலை தின்றுசிவந்த எச்சில். "வெள்ளிலைத் தம்பல்" | (கம்பரா.வரைக்கா.49) |
தம்பலம் - தம்பலை = சிவந்த இலந்தைப்பழம், அது பழுக்கும் முட்செடி. துமர் - தமர் - தமரை = தாமரை =செம்முளரி. தாமரை என்னுஞ் சொல் இன்று தன்சிறப்புப் பொருளிழந்து, பொதுப்பொருளில்வழங்குகின்றது. அதனால், செம்முளரியைக் குறிக்கச்செந்தாமரை என்று மிகைபடக் கூறலாகச் சொல்லவேண்டியுள்ளது. இது, அரைஞாண் கொடி, குளிர்ந்ததண்ணீர் என்பன போன்ற வழு வழக்கே. தாமரை - வ. தாமரஸ.
|