பக்கம் எண் :

50தமிழர் வரலாறு-1

துவரைப்பதி - .த்வாரவதீ.

துவர் - துகர் - துகிர் = 1. பவழம்.

"பொன்னுந் துகிரு முத்தும்" 

(புறம்.218)

2.பவழக்கொடி

"செந்துகிர் படருந் திரைக்கடல்" 

(கல்லா.முருக.வண.)

துகிர் - தெ., க., து. தொகரு.

துகிர்த்தாளி = பவழமல்லிகை (மலை.)

துகிர் - துகில் = 1 செந்நல்லாடை.

"பட்டுந் துகிலு முடுத்து" 

(நாலடி.264)

2. செந்துணிக்கொடி(பிங்.). துகில் - துகிலிகை= செந்துணிக்கொடி

"புரிசைமேற் புனைந்தவா ணிலாநெடுந் துகிலிகை" 

(கந்தபு.திருநகர.20)

தும்பரம் - தம்பரம் - தாம்பரம் =செம்பு (பதார்த்த.1170)

தாம்பரம் -. தாம்ர.

தம்பரம் - தம்பர் = வெற்றிலை தின்றுசிவந்த எச்சில் (மாறனலங்.470, உதா.)

தம்பரம்=தம்பலம்=1. வெற்றிலை தின்றுசிவந்த எச்சில். "தில்லைநல் லார்பொதுத்தம்பலங் கொணர்ந்தோ" (திருக்கோ.396)தெ.தம்ம. 2.வெற்றிலை பாக்கு. "தையால் தம்பலந்தின்றியோ" (கலித்.65) .3. தம்பலப் பூச்சி.

தம்பலம் - . தாம்பூல.

தம்பலப் பூச்சி = தம்பலம்போற்சிவந்த மூதாய்.

தம்பலம் - தம்பல் = வெற்றிலை தின்றுசிவந்த எச்சில்.

"வெள்ளிலைத் தம்பல்" 

(கம்பரா.வரைக்கா.49)

தம்பலம் - தம்பலை = சிவந்த இலந்தைப்பழம், அது பழுக்கும்

முட்செடி.

துமர் - தமர் - தமரை = தாமரை =செம்முளரி.

தாமரை என்னுஞ் சொல் இன்று தன்சிறப்புப் பொருளிழந்து, பொதுப்பொருளில்வழங்குகின்றது. அதனால், செம்முளரியைக் குறிக்கச்செந்தாமரை என்று மிகைபடக் கூறலாகச் சொல்லவேண்டியுள்ளது. இது, அரைஞாண் கொடி, குளிர்ந்ததண்ணீர் என்பன போன்ற வழு வழக்கே.

தாமரை - வ. தாமரஸ.