"எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்." | | "அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்." | (சொல்.35.36) |
என்பன தொல்காப்பியம். தெளிவு சுருங்கச் சொல்லல் சிறந்தபண்பாயினும், விளக்கமின்றிச் சொல்வதுபயன்படாது குற்றமாகுமாதலின், 'மாப்பூத்தது' என்றுபலபொரு ளொருசொல்லின் சிறப்புவினை குறியாது,'மாவீழ்ந்தது' என்று பொதுவினை குறிப்பது கூடாதென்றும்,அதை 'மாமரம் வீழ்ந்தது', 'விலங்குமா வீழ்ந்தது'என்று தெளிவுபடுத்திக் கூறவேண்டுமென்றும்; ஒருபொருளின் இயற்கைக்கு மாறான இயலையும் செயலையுங்கூறும்போது, அதற்குக் கரணியத்தையும் குறிப்பாகவோவெளிப்படையாகவோ குறித்தல் வேண்டுமென்றும்தொன்னூலாசிரியர் நெறியிட்டுள்ளனர். "ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்" | | "குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி" | (சொல்.54,55) |
என்பன தொல்காப்பியம். இலக்கியம் இசை, நாடகம், கணிதம், கணியம், ஏரணம்,மந்திரம், மறை, பட்டாங்கு, மடை, மருத்துவம், அறம்,அரசியல், மல், போர், நிலம், நீர் முதலிய பல்வேறுநூல்கள்பற்றிய சிறப்பிலக்கியமும்;அறுவகைப்பாவான தனிநிலைச் செய்யுளும், எண்வகைவனப்பான தொடர்நிலைச் செய்யுளும் ஆகியபொதுவிலக்கியமும்; மூலமும் உரையும் செய்யுளாகவேயிருந்தன. இங்ஙனம் வேறெம்மொழியிலும்இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்" | (1336) |
என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.
|