மாபெருந் தமிழினம்
சின்னபின்னமாகச் சிதைவுண்டதென்றும்,
தெரிவிக்கப் போதிய சான்றாம்.
2. பொருட்டிரிவு முறைகள்
(Semantic Changes)
(1) உவமையாகு பெயர்
சில பெயர்கள் உவமை யடிப்படையில்
அமைந்துள்ளன.
எ-டு: மாங்காய்-மாங்காய்போன்ற
நெஞ்சாங்குலை
தக்கட்டி-தக்கட்டிக்காய்
அல்லது கனிபோன்ற பட்டைக் கட்டி(sty).
எருமை
நாக்கு-எருமைநாக்குப் போன்ற மீன்.
கிளிமூக்கு-கிளிமூக்கு
வடிவான மாம்பழம்.
சில பொருள்களின் பெயர்,
பண்பியாகுபெயர் முறையில் அப் பொருள்களின்
நிறத்தைக் குறிக்கின்றன.
எ-டு: சாம்பல் வாழை, காக்கைப்
பிசின், பவழச் சோளம், குருதிக்காந்தள்,
பொற்கொன்றை, மயிற்கழுத்துச் சேலை. சில
பெயர்கள் உவமைத் தொகையாய் அமைந்துள்ளன.
எ-டு: ஆரால்மீ னவரை. கோழிக்கால்
தையல், பாம்புக் கற்றாழை, வௌவால் மீன்.
சில பெயர்கள் உவமை யடிப்படையில்
அமைந்து, தெளிவுபற்றி ஈறு பெற்றும் திரிந்தும்
உள்ளன.
எ-டு: ஆனைக்கொம்பன்-ஒருவகைச்
சம்பாநெல்.
காடைக்கண்ணி-காடைக்கண்
போன்ற ஒருவகைச் சிறு தவசம் (தானியம்), அதன்
பயிர்.
குதிரைவாலி-குதிரைவால்போற்
கதிர்தள்ளும் ஒரு வகைச் சிறு தவசப் பயிரும் அத்
தவசமும்.
நுணா-நுணல் (மணல் தவளை)
போன்ற காய் காய்க்கும் மரவகை.
(2) மூவகைத் தகுதி வழக்கு
இடக்கரடக்கல்
(Euphemism),
மங்கலம் (Euphemism),
குழூஉக் குறி (Conventional
terms) என்னும் மூவகைத் தகுதி வழக்கு
முறை யிலும், சில சொற்களும் வழக்காறுகளும்
தோன்றியுள்ளன.
|