மூவகைச் சுட்டுப்பெயர் முறையிலேயே எ,
ஏ, யா, என்னும் வினா வடிகளினின்று ஐம்பால்
வினாப்பெயர்கள் தோன்றியுள்ளன.
2. வினாப்பெயர்கள்
(Interrogative
Pronouns)
எ: எவன், எவள், எவர் (எவர்கள்), எது,
எவை
ஏ: ஏவன், ஏவள், ஏவர் (ஏவர்கள்), ஏது,
ஏவை
யா: யாவன், யாவள், யாவர் (யாவர்கள்),
யாது, யாவை
ஏ-எ., ஏ-யா, எ-எவ்,. எ-எல்-எது-எத்து-.
எந்து. ஏ-ஏல்-ஏது.
உயர்திணை ஆண்பாலைக் குறிக்கும் எவன்
என்னும் வினாப் பெயரும், அஃறிணை யிருபாலையும்
உணர்த்தும் எவன் என்னும் வினாப்பெயரும்,
வெவ்வேறாம்.
ஏது என்னும் சொல், ‘எப்படிக்
கிடைத்தது?‘ என்னும் பொருளில் குறிப்பு
வினைமுற்றாகவும் வரும்.
எ-டு: உனக்கு இது ஏது?
எது என்னும் சொல் சிறிது அறியப்பட்ட
பொருள் பற்றியும், யாது என்னும் சொல் சிறிதும்
அறியப்படாத பொருள்பற்றியும், வினாவாக வரும்.
எ-டு: குதிரைவாலி யாது?-சிறிதும்
அறியப்படாதது. வரகு
இக்கூலங்களுள் எது?-சிறிது அறியப்பட்டது.
யாவர் என்னுஞ் சொல் யார் எனத்
தொக்கு உயர்திணை முப்பாலையுங் குறிப்பதுடன், உலக
வழக்கில் ஆர் என்றும் மருவும்.
யா என்னும் வினாவடி, செய்யுள்
வழக்கிற் பலவின்பால் வினாப் பெயராகவும்
வழங்கும்.
எல்-என்-என்னது (ஒருமை), என்ன (பன்மை).
ஏல்-ஏன்.
"ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ" (தொல். 32)
என்று தொல்காப்பியம் கூறுவதால்,
வினாவெழுத்து முதற் காலத் தில் நெடிலாகவே
யிருந்ததென்பதும், அது ஏகாரமே யென்பதும்,
உய்த்துணரப்படும்.
ஏ-யா-ஆ-ஓ
யா சொல்லின் முதலிலும்,
ஆ ஓ
சொல்லின் ஈற்றிலும், ஏ அவ்வீரிடத்தும்,
வினாவாக வரும்.
|