|
ஒ.நோ: இடு (இடுகு)-இடை. இடு - இடுப்பு. இடை =
உடம்பின் நடு, நடு. இடுத்தல் - சிறுத்தல். இடு-இடுகு.
ஒன்று: ஒல்-ஒன்-ஒன்று.
ஒல்லுதல் = பொருந்துதல், ஒன்று சேர்தல்.
ஒல்-ஒர்-ஒரு(பெ.எ.)-ஒர் (பெ.எ.)
இரண்டு : ஈர்-இர்-(இரது)-(இரடு)-இரண்டு.
ஈர்தல்=ஒன்றை இரண்டாக
அறுத்தல்.
ஈர்-இர்-இரு ( பெ.எ.).
மூன்று : இது
முப்பட்டையான மூக்கின்
பெயரினின்றுதோன்றியிருக்கலாம்.
மூ (பெ.எ.)-மு(பெ.எ.).
நான்கு :இது குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் என நால்வகைப்பட்ட நிலத்தின்
பெயரினின்றுதோன்றிய தாகும். ஞாலத்திற்கு
நானிலம் என்னும் பெயருண்மை காண்க.
நல்-நன்று. "நன்றுபெரி தாகும்."(தொல். உரி. 45)
நனி+மிக. நனந்தலை = அகன்ற இடம்.
"நனவே களனும் அகலமுஞ் செய்யும்." (தொல். 859)
நல்-நால்-(நாலம்)- ஞாலம் = பரந்த
உலகம்.
ஒ.நோ: பர-பார் = ஞாலம், உலகம்.
நால்-நால்கு-நான்கு. நால் = நான்கு.
"பழகுதமிழ்ச் சொல்லருமை
நாலிரண்டில்" (பெருந்தொகை)
"வாலுளைப் புரவி நால்குடன் பூட்டி" (பெரும்பாண். 480)
நால் (பெ. எ.).
நிலப்பகுதியும் உலகம் எனப்படும்.
எ-டு:
"மாயோன் மேய காடுறை யுலகமும்" (தொல். பொருள்.5)
|