பல்-பன். எ-டு:
பன்னொன்று, பன்னிரண்டு.
பன்-பான். எ-டு: ஒருபான்
(ஒருபது), இருபான்(இருபது).
நூறு :
நுறு-நூறு=பொடி. நுறு-நுறுங்கு-நொறுங்கு. நூறு (பொடி)எண்ண
முடியாததாயிருப்பதால், அதன் பெயர்
முதற்பெருந்தொகையைக் குறித்தது.
ஆயிரம் : அயிர் = நுண்மணல்.
அயிர்-அயிரம்-ஆயிரம். ஆற்று மணலும் கடற்கரை
மணலும் ஏராளமாயிருப்பதால், மணற்பெயரும் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.
"வாழிய.......நன்னீர்ப் பஃறுளி
மணலினும் பலவே" (புறம்.9)
"வானத்து வெள்ளிகளையும் கடற்கரை
மணலையும் போல் உன் மரபைப் பெருகப்
பண்ணுவேன.்" (விவிலிய
மொழி பெயர்ப்பு)
"நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ்
செந்தில்.
..............................................
வடுவாழ் எக்கர் மணலினும் பலவே." (புறம். 55:17-21)
இலக்கம் :
இலக்கு=குறி. இலக்கு-இலக்கம் = குறி,
எண்குறி, எண், பேரெண்.
கோடி : குடு-குடுமி
= உச்சி, தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை,
பறவைச்சூட்டு,
மகுடம், மாடவுச்சி,மலையுச்சி,
நுனி. குடு-கொடு. கொடுமுடி = மலையுச்சி. கொடு- கோடி =
நுனி, முனை, கடைசி, எல்லை.
கடைகோடி என்னும் வழக்கை நோக்குக.
தெருக்கோடி விற்கோடி என்பனவும் முனையைக்
குறித்தல் காண்க. கோடி கடைசி யெண்ணாதலால்
அப்பெயர் கொண்டது.
தாமரை, குவளை, நெய்தல், ஆம்பல் முதலிய
மலர்ப் பெயர்கள் ஒவ்வோர் இதழுக்கும்; சங்கம்
(சங்கு) என்பது ஒவ்வொரு புரிக்கும் (வளைவிற்கும்);
ஒரு பெருந்தொகையாக உறையிடல் முறையிலும்; நாடு,
வாரணம், வெள்ளம் என்பன பேரளவுபற்றியும்;
கணிகம்(நூறுகோடி) என்பது கணிப்புப்பற்றியும்;
பல்வேறு அடுக்கிய கோடிப் பெயராயின. எட்டுத்
தாமரை கொண்டது ஒரு நாடு.
|