பக்கம் எண் :

இயனிலைப் படலம்65

2. முன்மை

ஊங்கு = முன்பு

உம்மை = முற்பிறப்பு. "உம்மைவினை.... ஒழியாது" (மணிமே. 26:32)

குனை = கூரிய முன்பக்கம் அல்லது மேற்பக்கம். நுனி - முனை.

நுனி - நுதி = முன். "நடந்தாள் நுதி" (சீவக. 1933, உரை)

நுதி - துது = முன், நுனி. துதிக்கை = யானையின் முன்னுள்ள அல்லது கூரிய நுனியுள்ள கை.

முன் -முனி. முன்-முனை=முன்பக்கம். முகு-முகம் = முன்பக்கம். முகம்-முகர்-முகரை. முகம்- முகன் = முகனை-மோனை.

முகம் என்னும் சொல் முன்மைக்கருத்தையும் தோன்றற் கருத்தையும் இணைத்துக்காட்டுதல் காண்க. இச் சொல் வடமொழியில் அரமாய என்று திரியும்.

முகஞ்செய்தல் 1. முன்னாதல். "தோற்றினான் முகஞ்செய் கோலம்" (சீவக..675)

2. தோன்றுதல். "முகஞ்செய் காரிகை" (பெருங். உஞ்சைக்.35:49)

3. முன்செல்லுதல் (செல்லுதல்)

உகைதல் = செல்லுதல், உகைத்தல் = செலுத்துதல்.

உகை-அகை. அகைத்தல் = செலுத்துதல். உதைத்தல் = செலுத்துதல்.

"இச்சிலை யுதைத்தகோற் கிலக்கம்" (கம்பரா. கார்முக.9)

உந்துதல் = செலுத்துதல்.

உய்தல் = செல்லுதல், தப்பிச் செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல்

உய்-ஒய். ஒய்தல்=செலுத்துதல்,

உய்-இய்-இயல். இயலுதல்=செல்லுதல், நடத்தல்.

இய் -இய. இயத்தல் = செல்லுதல், கடத்தல்.

இய - இயவு = செலவு.

இய - இயங்கு. இயங்குதல் = அசைதல், செல்லுதல்.

இய-ஏ-ஏகு. ஒ.நோ: வியர்- வேர்.

(சுல்)-சல்-செல்.

ச-செ. ஒ.நோ: சத்தான்-செத்தான்.

குமரிக்கண்டத் தமிழில், சல் என்னும் அடியும் செல்லுதல் வினையைக் குறித்திருத்தல் வேண்டும். இன்று அது அப் பொருளில், வடதிரவிட வழிப்பட்ட இந்தியில் வழங்குகின்றது.