2. முன்மை
ஊங்கு = முன்பு
உம்மை = முற்பிறப்பு. "உம்மைவினை....
ஒழியாது" (மணிமே. 26:32)
குனை = கூரிய முன்பக்கம் அல்லது
மேற்பக்கம். நுனி
- முனை.
நுனி - நுதி = முன். "நடந்தாள் நுதி" (சீவக.
1933, உரை)
நுதி - துது = முன், நுனி. துதிக்கை =
யானையின் முன்னுள்ள அல்லது
கூரிய நுனியுள்ள கை.
முன் -முனி. முன்-முனை=முன்பக்கம்.
முகு-முகம் = முன்பக்கம். முகம்-முகர்-முகரை.
முகம்- முகன் = முகனை-மோனை.
முகம் என்னும் சொல்
முன்மைக்கருத்தையும் தோன்றற் கருத்தையும்
இணைத்துக்காட்டுதல் காண்க. இச் சொல்
வடமொழியில் அரமாய என்று திரியும்.
முகஞ்செய்தல்
1. முன்னாதல். "தோற்றினான்
முகஞ்செய் கோலம்"
(சீவக..675)
2. தோன்றுதல்.
"முகஞ்செய் காரிகை" (பெருங்.
உஞ்சைக்.35:49)
3. முன்செல்லுதல் (செல்லுதல்)
உகைதல் = செல்லுதல், உகைத்தல் =
செலுத்துதல்.
உகை-அகை. அகைத்தல் = செலுத்துதல்.
உதைத்தல் = செலுத்துதல்.
"இச்சிலை யுதைத்தகோற்
கிலக்கம்" (கம்பரா.
கார்முக.9)
உந்துதல் = செலுத்துதல்.
உய்தல் = செல்லுதல், தப்பிச்
செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல்
உய்-ஒய். ஒய்தல்=செலுத்துதல்,
உய்-இய்-இயல். இயலுதல்=செல்லுதல்,
நடத்தல்.
இய் -இய. இயத்தல் = செல்லுதல்,
கடத்தல்.
இய - இயவு = செலவு.
இய - இயங்கு. இயங்குதல் = அசைதல்,
செல்லுதல்.
இய-ஏ-ஏகு. ஒ.நோ: வியர்- வேர்.
(சுல்)-சல்-செல்.
ச-செ. ஒ.நோ: சத்தான்-செத்தான்.
குமரிக்கண்டத் தமிழில், சல் என்னும்
அடியும் செல்லுதல் வினையைக் குறித்திருத்தல்
வேண்டும். இன்று அது அப் பொருளில், வடதிரவிட
வழிப்பட்ட இந்தியில் வழங்குகின்றது.
|