பக்கம் எண் :

இயனிலைப் படலம்87

(3) அடுக்குத்தொடர் ,, தீத்தீத்தீ.

(4) மிகவுச்சொல் ,, அரைஞாண்கயிறு, பெண் பிள்ளைப் பிள்ளை.

(5) அடைபெற்ற சொல் ,, தூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன், மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரர்.

(6) கிளவியம் ,, தமிழன் உரிமைபெறவேண்டின்

(7) தொடரியம் ,, இந்திய அரசியற் சட்டத்தை மாற்றியமைத்தல் வேண்டும்.

(10) பொருட்கேற்ற ஒலியமைப்பு

பொதுவாக, மெல்லோசைச் சொற்கள் செயலின் மென்மை யையும் வல்லோசைச் சொற்கள் செயலின் வன்மையையும் உணர்த்தும்.

எ-டு: குத்துதல் = சதையுள்ள இடத்தில் முட்டியால் அல்லது கத்தியால் தாக்குதல். குட்டுதல் = வன்மையான மண்டையில் முட்டியால் தாக்குதல்.

முத்துதல் = முகத்தோடு அல்லது வேறுறுப்பொடு முகம் மெல்லப் பொருந்துதல். முட்டுதல் = மண்டையொடு மண்டை இடித்தல்.

அரிதல் = சிறிதாய் நறுக்குதல். அறுத்தல் = பெரிதாய் நறுக்குதல். அரிவது அரிவாள்; அறுப்பது அறுவாள்.

கறித்தல் = கன்று இளம்புல்லை மெதுவாய்க் கடித்தல். கடித்தல் = பெரிதான விலங்கு முதிர்ந்த பயிரை வலிதாகக் கடித்தல்.

சன்னம் = மெல்லியது, திண்ணம் = திரண்டது.

குஞ்சு = மெல்லிதான இளம்பறவை. குச்சு = வல்லிதான சிறுகோல்.

திண்டு = மெல்லிய பஞ்சணை, திட்டு =வன்னிலமான சிறுமேடு.

கருப்பு = இயல்பான கருநிறம். கறுப்பு-சினத்தால் அல்லது முதிர்ச்சியால் நேரும் இருண்ட நிறம்.