|
மாறோக்கம் என்னும் கொற்கை நாட்டார்,
பண்டை நாளில் சிறுமியைப் பெண்மகன் என்றனர்; இன்று
வடார்க்காட்டார் பெட்டைப் பசன் என்பர். பையன்-பயன்-பசன்.
பலர்பாலீறுகள்
ஆர்தல் = பொருந்துதல், கூடுதல், நிறைதல்.
ஆர் = பொருத்து, நிறைவு.
பலர் கூடுதல் என்னும் கருத்தில் ஆர் என்னுஞ்
சொல்லே பலர்பாலீறாயிற்று.
எ-டு: தட்டார், பொல்லார்.
ஆரீறு அர் எனக் குறுகும்.
எ-டு: அவர், பலர், கொல்லர்.
ஆரீறு ஓர் என்றும் திரியும்.
எ-டு: பெரியார் - பெரியோர், முன்னார்
- முன்னோர்.
"ஆர்" ஈறு பெற்ற மகார் என்னும் பெயரும்
மார் என மருவிப் பலர்பாலீறாம். மக-மகார்-மார்.
எ-டு: அண்ணன்மார், தேவிமார்.
செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்றோடு
ஆரீறு சேரும் போது, ஒரு "மார்" தோன்றும். அது வினையீறு.
செய்யும் + ஆர் = செய்யுமார் - செய்மார் - செய்வார்.
உயர்திணைக்கு உரியதன்றென்று விலக்கப்பட்ட
கள் ஈறு, சிறுபான்மை அத் திணைக்கும் வரும்.
எ-டு: மக்கள்,
கோக்கள், குருக்கள், திருக்கள், நாங்கள், நீங்கள்,
அவர்கள், தாங்கள், ஆள்கள், ஆண்கள், பெண்கள்,
பையன்கள். மக்கள் என்னும் பெயர் தொல்
காப்பியத்திலும் உள்ளது.
"உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே."
(484)
"மக்கள் தாமே ஆறறி வுயிரே."
(1532)
மக + கள் = மக்கள். இது மரூஉப்
புணர்ச்சி.
ஒ.நோ: அக + களிப்பு = அக்களிப்பு.
மக்களை இழிந்தோர், ஒத்தோர், உயர்ந்தோர்
என முத்திறத்தா ராக வகுத்து, அவரை முறையே நீ, நீர்,
நீங்கள்; அவன், (அவள்), அவர்,
|