|
எ-டு: பல, நல்லவை.
பால்பகா அஃறிணைப்பெயர்
ஒருமையீறும் பன்மையீறும் பெறாது இயல்பாக
இருக்கும் அஃறிணைப் பெயர்களெல்லாம், ஒருமைக்கும்
பன்மைக்கும் பொதுவாம். அவற்றின் எண், அவற்றின்
வினைமுற்றாலும் முன்பின் வரும் சொல்லாலும் அறியப்படும்.
இது வழாநிலையாம்.
|
எ-டு:
|
மரம் வளர்கிறது.
குதிரை ஓடுகிறது.
ஒரு காய் என்னவிலை? |
} |
ஒருமை
|
|
மரம் வளர்கின்றன.
குதிரை ஓடுகின்றன. நூறுகாய் வாங்கினேன். |
} |
பன்மை
|
உயர்திணையிலும், ஆண்பாலீறும் பெண்பாலீறும்
பெறாது அவ் விரண்டிற்கும் பொதுவாயிருக்கும் ஒருசில
பெயர்கள் இம் முடிபு கொள்ளும். இது வழுவமைதியாம்.
எ-டு: பேருக்கு
ஐந்துவரும். - ஒருமை
"ஆயிரம்பேரைக் கொன்றவன் அரை
மருத்துவன்." - பன்மை
பெற்றதாயைப் பேணாத மூடர் என்பதில்,
தாய் என ஒருமையில் வந்தது வகுப்பொருமை யெனப்படும்.
தாயர் என்று பன்மையில்வரின், ஒவ்வொருவர்க்கும்
நற்றாயர் பலர் என்று பொருள்படுதலும் அங்ஙனம் கூடாமையும்
காண்க.
பண்புப்பெயரீறுகள்
பண்புப்பெயரீறுகள் சுட்டடிச்சொல்,
சினைப்பெயர், இடப்பெயர், நீர்ப்பெயர் என்னும்
நால்வகையில் தோன்றியுள்ளன.
சுட்டடிச்சொல்
அ-ஐ
அ-அம் அம்-அன்
அன்-அல்
அல்
அந்து+ஐ
அது-து து-று |
எ-டு:
"
"
"
"
"
" |
தொல்லை, பச்சை
நலம், சினம், ஆழம்,தனம்(தன்மை)
திறம்-திறன்
திறன்-திறல
்இயல்
அரந்தைசேது (சிவப்பு)
நன்று |
|